states

img

கோவா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

கோவாவில் பள்ளி,கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஜனவரி 26ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இன்று (ஜன.3) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.