states

img

பெண்களின் வேலை உரிமை உறுதி செய்யப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கேரளத்தில் பெண்களின் வேலை உரிமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்க சமரசமற்ற நிலைப்பாட்டை அரசு  எடுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அச்சமின்றி கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்துறையை பாது காப்பான முறையில் சுத்திகரிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீகுமரன் தம்பி அறக்கட்டளை யின் இரண்டாவது விருதை நடிகர் மோகன்லாலுக்கு வழங்கி பேசிய முதல்வர், மனதை மாசுபடுத்தும் கூறுகள் சினிமாவிலோ, சினிமாத் துறையிலோ எழாமல் பார்த்துக்  கொள்ள வேண்டிய பொறுப்பு, துறையில் பணியாற்றுபவர் களுக்கு உண்டு. கலைஞர்களுக்கு எந்த தொல்லையும் இருக்கக் கூடாது. கலை அல்லாத எந்த  நிலைபாடும் இருக்கக் கூடாது. இது தொடர்பாக சில புகார்கள் வந்த போது, மாநில அரசு அனைவரும் பெண்களாக உள்ள விசாரணைக் குழுவை நியமித்தது.

இந்தியாவுக்கே முன்மாதிரி 

இந்தியாவில் இது போன்ற ஒரு  செயல் கேரளத்தில் மட்டுமே நடந்துள்ளது. இது கேரளம் பெரு மைப்பட வேண்டிய முன் மாதிரி. இந்த மாதிரி பல இடங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது உறுதி. திரைப்படத் துறையின் வளர்ச்சி யைக் கருத்தில் கொண்டு மாநில அரசு குறிப்பிடத்தக்க தலையீடு களை மேற்கொண்டு வருகிறது.

தரத்தையும் புகழையும் தக்க வைத்துக் கொண்ட படங்களின் சிற்பி ஸ்ரீகுமரன் தம்பி. மாறி வரும் தலைமுறையினர் ஏற்றுக் கொள்ளும் மலையாளப் பாடல்களையும் உருவாக்கியவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கவிஞன் என்ற ஆளுமை. மலை யாள திரைப்படத்தின் பெருமை யை உயர்த்தியதற்காக கேரளம் மோகன்லாலுக்கு கடன்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

அதை தொடர்ந்து ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விருதை  மோகன்லா லுக்கு முதல்வர்  வழங்கினார். 

திரைத்துறையின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக கல்லியூர் சசிக்கும் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மோகன்லால் பரிசுகளை வழங்கி னார். விருதுகள் வழங்கப்பட்டதை யடுத்து, ஸ்ரீகுமாரன் தம்பியின் பாடல்கள் அடங்கிய ‘இசை மாலை’ நடைபெற்றது.