திருவனந்தபுரம், ஜன.13- கேரளத்தை பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறினார். கேரளத்துக்கு உரிய பங்கும் நிலுவைத் தொகைகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சாதாரண காரணங் களுக்காக ஒதுக்கீடுகள் துண்டிக்கப்படு கின்றன.
கேரளத்தில் இருந்து ஒரு ரூபாயை வசூலிக்கும்போது, அதில் இருந்து எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்று பார்க்க வேண்டும். கேரளத்தை விட 6 முதல் 8 மடங்கு வரை திரும்ப பெறும் மாநிலங்கள் உள்ளன. ஆனால் கேரளம் பயனடைய முடியாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது.
சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டிய சுமார் 1400 கோடி ரூபாய் வழங்கப்பட வில்லை. இது மருத்துவமனைகளின் முத்திரை என்ற பெயரில் வழங்கப்பட வில்லை. இதன் காரணமாக விழிஞ்ஞம் திட்டம் மற்றும் லைப் வீடு கட்டுவதற்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. கழிவறைகள், பள்ளிகள் போன்ற சில வற்றில் கேரளம் பெற்றுள்ள முன்னேற்ற மும் நிதி வெட்டுக்கு வழிவகுத்தது. எனவே ஏனைய துறைகளின் வளர்ச்சிக் கான சூழ்நிலையை உருவாக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.