கேரள லோக் ஆயுக்தா மசோதா வில் குடியரசுத் தலைவர் கை யெழுத்திட்டது, ஆளுந ருக்குப் பெரும் பின்னடைவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார்.
இதுகுறித்து பாலக்காட்டில் வியா ழனன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஜனநாயக அமைப்புகளின் உள்ளடக்கத்தை தெளிவான புரிதலுடன் திறம்பட பயன்படுத்தக்கூடிய வகை யில் கேரளா சட்டங்களை உருவாக்கி யுள்ளது. இதுவும் ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம் போலவே இருந்தது. ஆனால் ஆளுநர் கையெழுத்திடாமல் அப்ப டியே வைத்திருந்தார். உச்சநீதிமன்றம் தலையிட்டு ஏதாவது செய்யலாம் என்று தெரிந்ததும் குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டது.
ஆளுநரின் தலையீடு கேரள மக்க ளுக்கு எந்த வகையிலும் சாதகமாக அமையவில்லை. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதன் மூலம், மாநில அரசின் நிலைப்பாடு சரியானது என ஏற்கப்பட்டது. இது கேரளத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடை வை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளின் தகுதியைப் பார்க்க வில்லை. எதிலும் அரசாங்கத்தை எதிர்ப் பதுதான் அவர்களின் நிலைப்பாடு. அது வும் தவறு என்பதை குடியரசுத் தலை வரின் நிலைப்பாடு நிரூபித்துள்ளது” என எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார்.