மலப்புறம், டிச.16- கேரள பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட வர்களை செனட் உறுப்பினர்களாக ஆளுநர் ஆரிப் முகமது கான் திணித்து வருகிறார். இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஏற்கனவே, கேரள பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புக்கொடி காட்டினர். அப்போது பாதுகாப்பு விதிகளை மீறி ஆளுநர் தனது வாகனத்தி்லிருந்து கீழே இறங்கி மாணவர்களை மோச மாக திட்டினார். அதோடு “கோழிக்கோடு பல்கலைக்கழ கத்திற்கு போகிறேன். என்ன செய்கிறீர்கள் பார்க்கிறேன்” என மாணவர்களுக்கு சவால்விட்டார்.
இந்நிலையில் கோழிக்கோடு பல்கலைக்கழகம் முன்பு ‘சங்கி வேந்தரே திரும்பிப்போ’ போன்ற கருப்பு பதாகைகளை கட்டினர். ஆளுநருக்கு எதிராக எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் பி.எம். ஆர்ஷோ தலைமை யில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழக ஓய்வு இல்லத்துக்கு ஆளுநர் வருவதற்கு முன்பு கைது செய்து அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், தங்களது போராட்டம் தொடரவே செய்யும் என மாணவர் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.