states

img

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம்

நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளில் பல்வேறு மத குழுக்களுடன் கலந்துரையாடி ஒரு பொதுவான அணுகுமுறையை எட்டும் வரை அவசர நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.

தீர்மானத்தின் விபரம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கேரள சட்டப்பேரவை தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கி றது. ஒருதலைப்பட்சமான, அவசரமான ஒன்றிய அரசின் நடவடிக்கை அரசமைப் பின் மதச்சார்பற்ற தன்மையை வெற்றிட மாக்குகிறது என்று இந்த சபை கருது கிறது. அரசமைப்பு, அதன் பரிந்துரைக்கப் பட்ட கொள்கைகளில் மட்டுமே பொது சிவில் சட்டத்தை குறிப்பிடுகிறது. பரிந்து ரைக்கப்பட்ட கொள்கைகள் இயல்பா கவே நடைமுறைப்படுத்துவது கட்டாய மில்லை. அடிப்படை உரிமைகளை அமல் படுத்த நீதிமன்றங்கள் உத்தரவிடலாம். எவ்வாறாயினும், அரசமைப்பின் 44 ஆவது பிரிவின் வழிகாட்டுதல் கொள்கைகளை நீதிமன்றங்கள்கூட நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடி யாது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி யவர்கள் எவ்வளவு யோசித்தார்கள், ஏன் அதைச் செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது அரசமைப்பின் முன்னுரையின் மூலம் மதச்சார்பின்மையை உறுதிப் படுத்தும் நாடு இந்தியா. எந்த மதத்தை யும் நம்புவதற்கும், அதன்படி வாழ்வ தற்கும் குடிமகனின் சுதந்திரத்தை அடிப் படை உரிமைகளின் ஒரு பகுதியாக அர சமைப்பு உறுதி செய்கிறது. அரசமைப்பின் 25 ஆவது பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் உரிமை யை உள்ளடக்கியது. அந்த நடை முறையைத் தடைசெய்யும் சட்டம் மத  சுதந்திரத்திற்கான அரசமைப்பு உரிமை யை மறுப்பதும் மீறுவதும் ஆகும். சொந்த மத நம்பிக்கையின்படி வாழ்வது அடிப்படை தனிமனித சுதந்திரமாக உள்ளபோது, அதை மறுப்பதாகிவிடும்.

அரசமைப்புச் சட்டத்தின் 44ஆவது பிரிவு பொது சிவில் சட்டத்தை உருவாக்க அரசு முயற்சி செய்யும் என்று கூறுகிறது. பல்வேறு மதக் குழுக்களுடன் கருத் தொற்றுமை மற்றும் விவாதம் மூலம் படிப்படியாக மட்டுமே சாத்தியப்பட வேண்டும் என்பது இதன் உட்பொருள். இப்படி ஒரு கருத்தியல் விவாதத்தை நடத்தாமல், ஒருமித்த கருத்தை உரு வாக்காமல், இதுபோன்ற ஒருதலைப் பட்ச நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு முன்வந்திருப்பது பல்வேறு தரப்பு மக்களி டையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.  கேரள சட்டமன்றமும் அந்த கவலை யைப் பகிர்ந்து கொள்கிறது. இது மக்க ளின் ஒற்றுமையை உடைக்கும் வகுப்பு வாத நடவடிக்கை என்றும், இதுபோன்ற திணிப்புகள் தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. அரசமைப்பு சபையிலேயே, பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து வேறுபா டுகள் இருந்தன. அந்த சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின்  நிலைப்பாடு கவனிக்கத் தக்கது.

அம்பேத்கரின் நிலைப்பாடு இந்தி யாவின் சிக்கலான சமூக யதார்த்தங் களைக் கருத்தில் கொண்டு பல்வேறு மதக் குழுக்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாகும். வேற்றுமையில் ஒற்றுமையை அங்கீகரிப்பதாக இருந்தது. குடிமக்களுக்கு தனிப்பட்ட சட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை யைத் தக்கவைக்கும் பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்க முயற்சி செய்யலாம் என்று கூறிய அம்பேத் கர், அதுவும் கட்டாயமாக செய்யவேண் டும் என்று வலியுறுத்தவில்லை. அவர் ஒரு சாத்தியத்தை மட்டுமே சுட்டிக்காட்டினார். அதன் பிரதிபலிப்புதான், பொது சிவில் சட்டம் தொடர்பான குறிப்பு பரிந்துரைக்கப் பட்ட கொள்கைகளுக்கு என மட்டுப் படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளில் பல்வேறு மதக்  குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுவான அணுகுமுறை ஏற்படும் வரை ஒன்றிய அரசு அவசர நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்று இந்த அவை ஒருமனதாக கோருகிறது.