கண்ணூர், பிப்.25- கேரளாவில் பினராயி விஜயன் அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு 1,53,103 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், முதல் ஆண்டில், 86,034 பட்டாக்கள் விநியோகிக்கப் பட்டன. 1977ஆம் ஆண்டுக்கு முன் வன நிலத்தில் குடியேறிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதியுடன் பட்டா வழங்க மாநிலத்தில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி விண்ணப்பித்த ஆயிரக் கணக்கான விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மலைப்பகுதிகளில் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்.
1977-க்கு முந்தைய உடைமை ஆவ ணங்களுடன் புதிய விண்ணப்பத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் கூட்டு சரிபார்ப்பு சரியான நேரத்தில் முடிக்கப் படும். இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளில் உள்ள தகுதியுடைய அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். நிலம் சீரமைப்பை விரைவுபடுத்தும் வகை யில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. இதனால் லட்சக்கணக்கான விண்ணப்பங் கள் நிலுவையில் உள்ளன.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலுண்டி மற்றும் சாலியாறு ஆறுகளில் மணல் அள்ளுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் மார்ச் இறுதிக்குள் மணல் அள்ளும் பணி தொடங்கும். மாநி லத்தின் 32 ஆறுகளில் நடத்தப்பட்ட மணல் தணிக்கையின் அடிப்படையில், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங் களில் மணல் அள்ளுவதற்கான சாத்தி யக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. நடை முறைகளைப் பின்பற்றி இந்த பகுதிகளில் இருந்து மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.