கல்வியில் தொடந்து முன்னேறும் விதமாக கேரள அரசு புதிதாக 53 பள்ளிக்கட்டிடங்களை திறந்துள்ளது.
இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் கேரளம். இதை பல்வேறு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், கேரள அரசும் தொடர்ந்து கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை செய்கிறது.
கொரோனா காலத்தில் கூட ஆன்லைன் வழி கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய மாநிலம் கேரளா என்று புள்ளிவிபரங்கள் தெரிவித்தன.
மேலும், கல்வியில் சிறந்து விளங்குவதால், பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.
இந்நிலையில், தற்போது 17,183.89 கோடி மதிப்பிலான 1,557 திட்டங்களை உள்ளடக்கிய இரண்டாவது 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக 53 புதிய பள்ளிக் கட்டிடங்களை கேரள அரசு திறந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், கேரளா பொதுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பில் சுமார் ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ளது, இதன் விளைவாக 9.34 லட்சம் புதிய சேர்க்கைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.