திருச்சூர், ஜன.13- நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக மோடி வரும் புதன்கிழமை காலை எட்டு மணிக்கு குருவாயூர் வருகிறார். அதையொட்டி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே முகூர்த்த நேரத்தில் ஏற்கனவே பதிவு செய்த 48 திருமணங்களை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குருவாயூருக்கு வருவதையொட்டி அன்றைய தினம் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நேரத்தில் மற்றவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது. கடைகள் திறந்திருந்தாலும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த அறையை பதிவு செய்தவர்களின் விவ ரங்களை செவ்வாயன்றே காவல்துறை யினர் சேகரிக்கத் தொடங்கினர். பிரதமர் வருகைக்கு முன் வெளிவட்ட சாலை முற்றிலும் மக்கள் நடமாட்டம் தடுக்கப்படும்.
மேற்குப் பகுதியில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படு கின்றன. தனியார் பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபியின் மகளுக்கு வரும் புதனன்று (ஜன.17) காலை 8.45 மணியளவில் திரு மணம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட மற்ற திரு மணங்கள் காலை 6 மணிக்கு முன் அல்லது 9 மணிக்குப் பிறகு செய்ய அறி வுறுத்தப்படும். அதிகபட்சம் 20 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு தனி அனு மதி சீட்டு வழங்கப்படும். வேறு பிரசாதம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படாது. புதனன்று முழு பாதுகாப்பு விதி முறைகள் பின்பற்ற உள்ளதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேர சோதனை நடத்தப்படும்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை குருவாயூர் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் முற்றிலும் எஸ்பிஜி கட்டுப்பாட்டில் இரு க்கும். காலை 8 மணிக்கு கோவிலுக்கு மோடி செல்கிறார். 8.45க்கு திரு மணத்தில் கலந்து கொண்டு திரும்பு வார். சுரேஷ் கோபிக்காக சாதாரண மக்கள் தங்களது முகூர்த்த நேரத்தை தியாகம் செய்ய வேண்டுமா என்கிற கேள்வியும் அதிருப்தியும் கேரளத்தில் எழுந்துள்ளது.