states

img

கேரள பட்ஜெட் இன்று தாக்கல் - முன்னேற்றமே இலக்கு என நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் உறுதி

திருவனந்தபுரம், பிப்.4-  ஒன்றிய அரசு புறக்கணித்தாலும், கேரளத்தின் சாதனைகளைக் காக்கவும், மாநிலத்தை மேலும் முன்னேற்றவும் திங்களன்று (பிப்.5) தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில்  அதற்குரிய அறிவிப்புகள் இருக்கும் என்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். பட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்  மேலும் கூறுகையில், வரம்புகளைக் கடந்து மாநிலத்தை முன்னேற்றுவதே இதன் நோக்கம். மக்களுக்கு அதிக சுமை ஏற்படாத வகையில், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய பட்ஜெட்டில் தற்போதைய மந்த நிலைக்கு எதிரான தொகுப்பு எதிர்பார்க்கப்பட்டது. அது இல்லாதது பின்னடைவுதான்.  கேரளம் பொருளாதாரத்தில் சிறந்த நிலையில் இல்லையென் றாலும், அரசு நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரவு -செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். கேரள மக்களுக் காக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய ஒவ் வொரு தருணத்திலும் எதிர்க்கட்சி கள் எடுத்துள்ள நிலைப்பாடு ஆச்சரிய மளிக்கிறது. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு எதிராக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் குறித்து எதுவும் பேசாமல் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசும் கேரளாவின் பாதையை பின்பற்றி ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகள் போராட்டம் நடத்தத் தயாராகி வருவது, கேரளம் சொல்வது சரிதான் என்பதற்கு ஆதாரம் என்றும் நிதியமைச்சர் கூறினார்.