states

img

நாட்டை தவறாக வழி நடத்தும் ஒன்றிய நிதியமைச்சர்

பெரும்பாவூர், டிச.11- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. ஒன்றிய நிதி அமைச்சர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். மாநிலத்திற்கு 100 சதவிகித ஜிஎஸ்டியும், 50 சதவிகித ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த சரக்கு விற்பனை வரி)யும் கிடைக்கும் என்று மாநிலங்க ளவையில் ஒன்றிய நிதி அமைச்சர் கூறினார். இது தவறான புரிதலை பரப்புவதற்காக திட்டமிட்டு சொல்லப் பட்ட அரசியல் அறிக்கை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.  

பெரும்பாவூர் தொகுதி புதிய கேரளம் அரங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: 

ஜிஎஸ்டியின் ஒரு பகுதியாக வரு வாயில் 50 சதவிகிதம் மாநிலங்க ளின் வரி வருவாயாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, மாநி லங்கள் 44 சதவிகித வரி உரிமைக ளை இழந்தன. ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வதாக ஒன்றிய அரசு தெரி வித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது முடிவுக்கு வந்தது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஒன்றிய அரசின் நிதியில் இருந்து வழங்கப் படுவதில்லை. மாறாக, தனி செஸ் விதிப்பதன் மூலம்  மாநிலத்திடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இழப்பீட்டின் மீதான செஸ் வரியை ஒன்றிய அரசு இன்னும் வசூலித்து வருகிறது. ஜிஎஸ்டிக்கு முன்பும் அதன் அமலாக்கத்தின் போதும் வருவாய் நடுநிலை விகிதம் 16 சதவிகிதமாக இருந்தது. இப்போது அது 11 சதவிகிதமாக உள்ளது. 35-45 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள், ஜிஎஸ்டி வந்ததும் 28 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மக்க ளவைத் தேர்தல் வந்ததும் மீண்டும் வரி குறைக்கப்பட்டது. இப்போது அது 18 சதவிகிதமாக உள்ளது. வரி குறைப்பால் இந்த பொருட்களின் விலை குறையவில்லை. மக்க ளுக்கு பலன் கிடைக்காதது மட்டு மின்றி, மாநிலங்களின் வரி வருவா யிலும் பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஜிஎஸ்டி பங்கை நிர்ணயிப்பதில் தெளிவின்மை உள்ளது. ஒன்றிய - மாநில நிதி பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. வெளிப்படைத்தன்மைக்கு, ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் தொகையை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அரசு அதிக அளவில் செலவழிப்பதாகக் கூறப் படுகிறது. 15 ஆவது நிதி ஆயோக் அறிக்கையின்படி, மொத்த செல வில் 62.4 சதவிகிதம் மாநிலங்க ளால் ஏற்கப்படுகிறது. ஆனால், 62.2 சதவிகிதம் வருவாய் ஒன்றிய அரசுக்கு செல்கிறது. இந்த உண் மையை ஒன்றிய நிதி அமைச்சர் மறைத்துள்ளார்.

கேரளத்தின் கடன் வரம்பை குறைக்கும் நடவடிக்கையையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. 10 ஆவது நிதி ஆயோக் காலகட்டத் தில் மாநில பங்கு 3.875 சதவிகித மாக இருந்தது. 15 ஆம் நிதி ஆணை யத்தின் காலகட்டத்தில் 1.92 சதவிகி தமானது. பாதிக்கு மேல் வெட்டிக் குறைத்துவிட்டு அதிகம் பெறுவதாக ஒன்றிய நிதியமைச்சர் வாதம் செய்கிறார் என்றார் முதல்வர்.