கர்நாடக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்த முன்னாள் பிர தமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) காங்கி ரஸ் கட்சியை எதிர்ப் பதாக கூறி பாஜக கூட்டணியில் இணைந் தது. “மதச்சார்பற்ற” ஜனதா தளம் என கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைவதா? என ஜேடிஎஸ் மூத்த தலைவர்கள் பலர் காங்கி ரஸ் கட்சியில் இணைந்தனர். சில தலை வர்கள் (இப்ராஹிம்) கட்சியை இரண்டாக உடைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அவர்களை கட்சியில் இருந்து துரத்தியுள்ளார் ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி.
இந்நிலையில், அமைச்சர் ஒருவர் மூலம் கர்நாடகாவில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நிகழலாம் என ஹெச்.டி.குமார சாமி கூறி அடுத்தக்கட்ட அரசியல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஹாசனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,”காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் சரியாக இல்லை. இந்த ஆட்சி எப் போது கவிழும் என என்னால் கணிக்க இய லாது. ஆனால் ஆட்சியில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் ஒன்றிய அரசு கையிலெ டுத்துள்ள வழக்கு விசாரணையிலிருந்து தப்ப காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் சேர உள்ளார். அவர் தன்னுடன் 50 முதல் 60 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு அழைத்து வர உள்ளார். இதற்காக பாஜக தலைவர்களு டன் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’’ எனக் கூறினார்.
செய்தியாளரின் கேள்விக்கு குமாரசாமி மழுப்பல்
எல்லாம் தெரிந்தது போல பேசுகிறீர்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க உள்ள அந்த அமைச்சர் பெயரை கூறலாமே? யார் அவர்? என செய்தியா ளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு குமார சாமி,”முக்கிய தலைவர் ஒருவரிடமிருந்து இந்த நடவடிக்கையை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்.சிறிய தலைவரிடம் அல்ல. எப்போது வேண்டுமானாலும், மகா ராஷ்டிராவில் நிகழ்ந்ததைப் போல் (ஆட்சி மாற்றம்) கர்நாடகாவிலும் நிகழலாம். அர சியல்வாதிகள் சித்தாந்தத்தை எல்லாம் பின் னால் வைத்துவிட்டு, தங்கள் வசதிக்கு எது உகந்ததோ அதனை தேர்வு செய்வதால் இது போன்ற அரசியல் மாற்றங்கள் ஏற்படு கின்றன” என மழுப்பலாக கூறினார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளி லும், பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார் பற்ற ஜனதா தளம் வெறும் 19 தொகுதி களிலும் வென்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் வலுவாக உள்ள இடங்களில் காங்கி ரஸ் வெற்றி பெற்றதால் கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணி உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.