கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்தோ ஜப்பான் ராணுவ பயிற்சி நாளை நிறைவடைய உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தோ-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெலகாவில் உள்ள மராத்தா லைட் இன்ஃபாண்டரி ரெஜிமெண்டில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கிய இந்தோ-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி நாளை நிறைவடைகிறது
பரஸ்பர ஒத்துழைப்பு, போர்க்கால நடவடிக்கைகள் மற்றும் துரித செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதங்களுடன் ஹெலிகாப்டரில் இருந்து கயிறுகள் மூலம் குதித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றன.