கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு அம்மாநில அரசு நிலம் வழங்கி இருக்கிறது. அந்த வகையில் லாமணி என்பவருக்கும் அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலத் தின் ஒருபகுதியை மிகக்குறைந்த தொகையில் தங்களுக்கு வழங்கு மாறு கேட்டு பாஜக எம்.எல்.ஏ. நேரு ஓலேகர், விவசாயி லாமணி யையும் அவரது குடும்பத்தினரை யும் மிரட்டி வந்ததுள்ளார். இத னால் விரக்தியடைந்த லாமணி (70), அவரது குடும்பத்தினர் குரு சப்பா லாமணி (72), கங்கவ்வா கப்பர் (65), அனுமநாதப்பா (41) ஆகியோருடன் தனக்கு சொந்த மான விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றுள்ளனர்.