states

img

41 தொழிலாளரை மீட்க கடும் போராட்டம்!

உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கலை ஏற்படுத்தும் 15 மீட்டர் தூரம்

சில்க்யாரா, நவ. 23- உத்தரகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 12 நாட்களுக்குப் பிறகும் கடும் போராட்டமாக மாறியிருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதி யாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ.  தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த சுரங்கப் பாதையில் நவம்பர்  12 அன்று அதிகாலை 4 மணி அள வில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மண் மூடியதால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.  தேசிய பேரிடர் மீட்பு படையினர்,  மாநில பேரிடர் மீட்பு படையினர், தீய ணைப்பு படையினர் உள்ளிட்டவர்கள் மீட்பு பணியை தொடங்கிய நிலை யில், 12 நாட்களாக பெரிய முன்னேற் றம் ஏற்படவில்லை.

திருச்செங்கோடு ஜியோ டெக் உதவி

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழி லாளர்களுக்கு 6 இஞ்ச் குழாய் மூலம் உணவுகள் சுரங்கப் பாதைக்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாட்டை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தரணி ஜியோ டெக் நிறுவனத்தினர் அமை த்து தந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழி லாளர்களின் நிலைமை குறித்து வீடியோ வெளியானது. தொடர்ந்து 60 மீட்டருக்கு பிரம் மாண்ட குழாய் உள்ளே செலுத்தப் பட்டு, குழாய் வழியே தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளே சென்ற பின் ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்கப்படுவார்கள் என்றும், புதனன்று இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்படு வார்கள் என்று மீட்புப்படை தகவல் தெரிவித்தது. இதையொட்டி 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்கு முன்னதாகவே 8 கிலோமீட்டர் தொலைவில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது. ஆனால் புதனன்று சில தடைகள் ஏற்பட்டன. இதனால் மீட்புப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. 

சிக்கலை ஏற்படுத்தும் 15 மீட்டர்
 

இதற்கு அடுத்ததாக, வியாழ னன்று அதிகாலைக்குள் தொழிலாளர் களை மீட்டு விடுவோம் என மீட்புப்படை யினர் கூறினர். ஆனால் வியாழனன்று இரவு 8 மணி வரை 45 மீட்டர் (மொத்த தூரம் 60 மீட்டர்) மட்டுமே செல்ல முடிந்தது. கடைசி 15 மீட்டருக்கு குழா யைச் செலுத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், வியாழனன்று நள்ளிரவுக்குள் அல்லது வெள்ளியன்று அதிகாலைக்குள் 41 தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புப்படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.