states

img

இமாச்சல் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல் பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டி நகரிலிருந்து மேற்கே  24 கி.மீ தொலைவில் பாஞ்சியத்ருவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என மண்டி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.