இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல்பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள சைஞ் பகுதிக்கு இன்று காலை 8 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து நியோலி-ஷான்சர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சோல்ஜர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.