ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் அருகே, தெருநாய்கள் கடித்து தாக்கியதில் 18 மாத குழந்தையான சாத்விகா உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் சமீப காலங்களில் தெரு நாய்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொடூரமாகத் தாக்கி வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மேட்டவலசா கிராமத்தில் 18 மாத குழந்தை சாத்விகா, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கே இருந்த தெரு நாய்கள் சேர்ந்து அந்த குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் விரைந்து வந்து குழந்தையை தெரு நாய்களிடம் இருந்து மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை சாத்விகா உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.