states

img

ஆந்திரா காக்கினாடாவில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு

ஆந்திரா மாநிலம் காக்கினாடாவில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். கடுமையான ரத்தப்போக்குடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தந்தை வீட்டிற்கு வெளியே தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் அவரது தாத்தா பாட்டி விழித்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. சிறுமியை தேடியுள்ளனர். அருகில் உள்ள வீடுகளில் கேட்டுள்ளனர். ஆனால், சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு சிறுமியின் வீட்டின் அருகே உள்ள மரத்தின் அடியில் பலத்த காயங்களுடன், ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் கண்டறிந்தனர்.
சிறுமியின் உள் மற்றும் வெளி காயங்களுக்கு இருந்ததால், காக்கினாடா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுமி குணமடைய சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக, காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

;