பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் “முக்யமந்திரி மகிளா உதயமிதா அபியான்” என்ற புதிய திட்டத்தை அம்மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சுமார் 145 வணிகத் திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து அரசு மானியத்தைப் பெறலாம். முதல் ஆண்டில் அடிப்படை தகுதிகள் பூர்த்திசெய்யப் பட்டால் அரசு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் இந்த நிதியை பயன்படுத்தும் தன்மையை பொறுத்து, அடுத்த 2 ஆண்டுகளில் 12,500 ரூபாயும், வங்கி கடனாக 12,500 ரூபாயும் வழங்கப்படும்.
ஆனால் இந்த புதிய நிதி ஆதரவு திட்டத்தின் விதிமுறைகள் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளன. விதிமுறை யில், “பொது மற்றும் ஓபிசி பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், தலித் மற்றும் பழங்குடி பெண்களுக்கு நான்கு குழந்தைகள் என்றும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில்,“குழந்தைகளின் எண்ணிக்கையுடன் திட்டத்தை இணைப்பதற்கான காரணம் ஒரு பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் இருந்தால், வணிகம் செய்ய அவருக்கு எங்கே நேரம் கிடைக்கும்? குழந்தைகளை படிக்க வைப்பதற்குதான் அவருக்கு நேரம் சரியாக இருக்கும்” என சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிறார் திருமணத்தை கட்டுப்படுத்துவதாக கூறி புதிதாக திருமணம் செய்த முஸ்லிம் குடும்பங்களை கைது நடவடிக்கை மூலம் அசாம் பாஜக அரசு சித்ரவதை செய்த நிலையில், தற்பொழுது 3 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசின் திட்டங்கள் கிடையாது என்ற புதிய தாக்குதலை தொடங்கி யுள்ளது.
அசாம் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க் பட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.