states

img

அசாம் கனமழைக்கு 4 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் பெய்த கனமழைக்கு நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் பெய்து வரும் கனமழையால் பஜாலி, பக்சா, பர்பேட்டா, பிஸ்வநாத், கச்சார், தர்ராங், கோல்பாரா, ஹைலகண்டி, ஹோஜாய்,கம்ரூப், கரீம்கஞ்ச உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

அசாமில் 100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 14,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளநீரால் பல தடுப்பணைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.