science

img

வானிலை மையம் எச்சரிக்கை: சதம் அடிக்கும் வெயில்

சென்னை மே 13- தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்க ளுக்கு 7 பகுதிகளில்  அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி,வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணி யிலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. எனவே அடுத்து வரும் மூன்று நாட்க ளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்க ளும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை  செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், இரு நேரங்களில் தெளி வாகவும் காணப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

;