சென்னை, நவ.19- 14 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், வரும் 25 ஆம் தேதி காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத் திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், வரும் 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தி லிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற் கைக்கோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைக் கோள்கள் விண் ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ‘எக்ஸ் எல்’ வகை யில் 21-வது ராக்கெட்டாகும். அதே போல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறுகிறது.
பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக் கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லி யமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக் கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் அமெ ரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும். தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற் கான கவுண்ட்டவுன் வரும் 23 ஆம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.