science

img

நாசா விண்வெளி மையத்தில் அதிராம்பட்டினம் மாணவர்கள்

தஞ்சாவூர் டிச.2- அமெரிக்காவிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ள பிரில்லியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் “நாசா” விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், அதிராம் பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமையில், 3-ஆவது ஆண்டாக 7 நாட்கள் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு, கடந்த நவ.4 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்குள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்களின் பயண பயிற்சி மற்றும் ராக்கெட் ஏவுதல் (சிமிலேட்டர்) பயிற்சி வழங்கப்பட்டது. இதில், விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரரா வதற்கு அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைக்கோளை கட்டுப்படுத்தி இயக்குவது எப்படி? அது எப்படி இயக்கப்படுகிறது, ரோபோ தொழில் நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. 

மேலும், நிலவுக்கு சென்று வந்துள்ள அப்போலோ மற்றும் சடர்ன்வி ராக்கெட் ஆகியவற்றை நேரடியாக பார்த்தனர். ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் ஒர்லேண்டா டிஸ்ட்டினி பூங்காவிற்கு சென்று வந்தனர். பயண முடிவில் மியாமி பல்கலைக்கழகத்தை பார்வை யிட்டனர். விண்வெளி மையம் தொடர்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி முதலிடம் பெற்றதால் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக அழைத்துச் செல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.

;