♦ புதிய மின்னணு சுற்று கண்டுபிடிப்பு
நம் உடலின் சில இயக்கங்களை அறிய மார்பு போன்ற பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்படுகின்றன. சில மின்னணுக் கருவிகளை கைகளில் அணிந்து கொள்கிறோம். இது போன்ற இழுக்கப்படும் மற்றும் வளைக்கப்படும் பயன்பாடுகளில் மின்னணுக்கருவியின் மின்சுற்று(circuit) இறுக்கமாக இருந்தால் சிறப்பான விளைவுகளை தராது. இது குறித்த ஆய்வில் புதிய மின்சுற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இழுதன்மை கொண்ட பிளாஸ்டிக் தகடுகளில் நுண்மையான உலோக கலவைத்துளிகளால் கோடுகள் வரையப்படுகின்றன. காலியம் மற்றும் இண்டியம் உலோகக்கலவையான இது 16டிகிரி செல்சியத்தில் நீர்ம நிலையில் உள்ளது. இந்த நிலையிலுள்ள உலோகக்கலவை மின்சாரத்தை கடத்தும்.ஆனால் அவை விரைவில் ஆக்ஸிடைஸ் ஆகி ஒவ்வொரு துளிகள் மீது மெல்லிய மின்கடத்தா இழை படிந்துவிடுகிறது.இவற்றிலுள்ள நிலை மின்னேற்றம் உலோகத் துளிகள் ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கிவிடுகிறது. இதனால் எல்ஈடி,மைக்ரோ சிப் மற்றும் பிற பாகங்களை அவற்றால் இணைக்க முடிவதில்லை. ஆனால் இந்த நுண்கோளங்களை அதிஅதிர்வு ஒலி அலைகளைக் கொண்டு மோதும்போது அவற்றிலிருந்து சிறிய நானோ அளவில் உலோகக்கோளங்கள் சிந்துகின்றன. விலக்கப்பட்ட பெரிய கோளங்களுக்கு இடையில் இவை இணைப்புப் பாலங்களாக அமைகின்றன.இதன் மூலம் எலெக்ட்ரான்கள் பயணித்து மின்சாரம் பாய வழி வகுக்கின்றன. மின்சுற்றுகள் வரையப்பட்டுள்ள பிளாஸ்டிக் தகடுகள் இழுபடும்போது அல்லது வளைக்கப்படும்போது பெரிய உலோகக் கோளங்கள் சிதைவுறலாம்;ஆனால் சிறிய கோளங்கள் உறுதிப்பாட்டுடன் அங்குமிங்கும் நகர்ந்து இணைப்பை நிலைநிறுத்துகின்றன.இந்த ஆய்வு நடத்திய கொரிய சோதனைசாலையின் பெயர் தாங்கிய எல்ஈடி பலகையிலும் ஒருவரின் ரத்த ஓட்டத்தை கண்காணிக்கும் மானிட்டரிலும் இந்த இணைப்பை பொருத்தி சோதித்துக் காட்டப்பட்டது.
♦ ‘ஆல் போல் தழைத்து’
ஆல மரமும் அரச மரமும் நீண்ட காலம் வாழும் காரணம் குறித்து போபாலிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் (IISER) மரபணு தொடர்களை ஆராய்ந்து கண்டுள்ளது. ஆல மரத்தில் 17 மரபணுக்களும் அரச மரத்தில் 19 மரபணுக்களும் படிமுறை மாறு தலுக்கான(evolutionary change) பல்வேறு அடையாளங்கள் கொண்டுள்ளதாக கண்டுள்ளார்கள். 0.8 மில்லியன் வருடங்களுக்கு முன் இவற்றின் இனம் பரவுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆல மரத்தில் வேர் வளர்ச்சி, இலைகள் உருவாதல், வளர்சிதை மாற்றம், மகரந்தக் குழல், விதை வளர்ச்சி ஆகியவற்றில் இந்த மரபணு மாற்ற அடை யாளங்கள் காணப்பட்டுள்ளன. அரச மரத்தில் வேர் வளர்ச்சி, இனப் பெருக்கம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவைகளில் காணப்படுகின்றன.இந்த மரங்களோடு நெருக்கமாக உள்ள 20தாவர இனங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றிலும் நீண்ட காலம் பிழைத்திருப்பதுடன் தொடர்புடைய தாவர சுரப்பிகளின் சமிக்கை, உணர்வுத் தடங்கள், பூச்சிகளுடன் இணைந்த வாழ்வு மற்றும் அழுத்தங்களை தாங்குதிறன் போன்ற செல் இயக்கங்களின் மரபணுக்கள் சூழலுக்கேற்ற படிநிலை மாறிய அடையாளங்கள் காணப்பட்டன. இரு மரங்களின் மரபணுக்களின் குழுமம் மிகவும் பெருகி நோய் எதிர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. வறட்சி, ஆக்சிடேடிவ் அழுத்தங்கள், நோய்க் கிருமிகள் ஆகியவற்றை தாங்குவதுடன் இந்த மரபணுக்கள் தொடர்புடையவை. இவற்றின் மருத்துவ குணத்திற்கு இந்த தன்மைகள் காரணம் என்கிறார் இந்தக் கழகத்தின் பேராசிரியரும் இந்த ஆய்வின் ஆசிரியருமான வினீத் கே.சர்மா. மேலும் வண்டுகளைக் கவரும் பூக்களின் மணத்திற்கு காரணமான வேதிப்பொருட்களை உண்டாக்குகின்றன.
♦ கடல்மட்டம் உயரும் அபாயம்
ஆர்டிக் கடலிலுள்ள பனிப்பாளங்கள் (glaciers) உருகுவதால் கடல் மட்டம் உயர்வது நாம் அறிந்ததே.இப்போது கிரீன்லாந்திலுள்ள உள்நாட்டுப் பனிப்பாளங்களும் உருகி கடல் மட்டம் மேலும் உயரும் அபாயத்தை அறிவிய லாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அடுத்த 80ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்வதில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவின் பங்கு இதுவரை கணித்திருந்ததை விட அதிகமாக இருக்கும் என்கிறார் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை சேர்ந்த பனிப்பாள நிபுணர் ஷபாகத் அப்பாஸ் கான். கிரீன்லாந்தின் வடகிழக்குப் பகுதியிலிருந்து பனிப்பாளங்கள் 600கிமீ பயணம் செய்து கடலில் வீழ்கிறது. அந்த நாட்டின் மொத்த பனித்தகடுகளில்12% இந்த பனிஓட்டத்தின் மூலம் கடலில் கலந்துவிடுகிறது.கடல்கரையை நெருங்கும்போது அது இரு பனிப்பாளங் களாக பிரிகிறதாம். அவை உடையாமல் இருக்கும்போது பின்னாலுள்ள பனிப் பாளங்கள் கடலில் கலக்காமல் ஒரு அணை போல் பாதுகாக்கின்றன. பத்தாண்டு களுக்கு முன்னால் இவை உடைந்தபோது பின்னாலுள்ள பனிப்பாளங்கள் ஓட்டம் அதிகரிப்பது காணப்பட்டது. ‘நங்கள் இதுவரை கரையிலேயே கவனம் செலுத்தி னோம். உள்நாட்டில் இவை ஏற்படுவதுவைக் கவனிக்கவில்லை’ என்கிறார் ஆர்டிக் ஃபிரான்டியர்ஸ் என்கிற அமைப்பை சேர்ந்த ஜென்னி டர்டன். கான் மற்றும் அவரது குழுவினர் கடலினடியில் உள்ள பூமி தட்டுகள்(tectonic plates) இடம் பெயர்வதை அளக்கும் ஜிபிஎஸ் கருவிகள் உதவியுடன் கிரீன்லாந்தின் உள்பகுதியில் பனிப்பாளங்கள் நகரும் வேகத்தை அளவிட்டனர். துருவப் பிரதேசத்தை சுற்றும் செயற்கைக்கோள் மற்றும் விமான ஆய்வுகள் மூலம் பனிப்பாளங்களின் வேகம் உள்நாட்டிலிருந்து கரைநோக்கி செல்லும்போது 200கிலோ மீட்டர் ஆகிறது என்று தெரிகிறது. மேலும் உள்நாட்டுப் பகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தொடங்கிய பனிப்பாளங்களின் சுருக்கம் 2021 ஆம் ஆண்டு 250கிலோமீட்டர்வரை முன்னேறியுள்ளது. இந்த தரவுகளைக் கொண்டு கணினி சிமுலேஷன் முறையில் கடல் மட்டம் 2100 ஆம் ஆண்டிற்குள் 14-16 மில்லிமீட்டர் உயருவதற்கு இந்தப் பனிப்பாளங்களே காரணமாக இருக்கும் எனக் கண்டறிந்துள்ளனர். இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிரீன்லாந்தின் மொத்த பனித்தகடுகள் அளித்ததற்கு சமமாகும். கான் குழுவினர் இது போன்ற ஆய்வுகளை கிரீன்லாந்தின் மற்ற பகுதிகள் மற்றும் அண்டார்டிக்கா பகுதிகளில் செய்ய உள்ளனர். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாறுவதற்கு இது போன்ற கணக்கீடுகள் மிக முக்கியம் என்கிறார் கான்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லே ஸ்டியரன்ஸ்.