science

img

ராக்கெட் கனவை நனவாக்கிய மகன்

அரியலூர், ஜூலை.30 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வதுரை. இவரது மகன் சண்முகசுந்தரம். (30) இவர் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றவர். ஞாயிறன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-56 லிருந்து ஏழு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டது. அதில் மூன்று ராக்கெட்டுகளை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தயாரித்துள்ளார் என்பதுதன் பெருமைக்குரிய விஷயம்.   இது குறித்து சண்முகசுந்தரத்தின் தந்தை செல்வதுரை, தாய் அறிவழகி ஆகியோர் ஞாயி றன்று நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-  எனது மகன் சிறுவயதில் இருந்தே ராக்கெட் விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான். அதே நேரத்தில் படிப்பதிலும் ஆர்வமுடன் விளங்கினார். 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த எங்களது மகன் இளநிலை படிப்பில் ஏரோநாட்டிக்கல்/ ஏரோஸ்பெஸ் இன்ஜினியரிங் துறையை தேர்ந்தெடுத்து சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்தான். தற்போது சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் செயற்கைக்கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் முனைவர் பட்டப் படிப்பு படித்துவருகிறான்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் சில மாதங்கள் தங்கி செயற்கைக்கோள்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் படித்துள்ளான். ஆராய்ச்சிக் காலத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சிறிய மற்றும் பெரிய வகை செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு குழுத் தலைவராகப் பணிபுரிந்துள்ளான். இந்த நிலையில் ஞாயிறன்று சிங்கப்பூர் சார்பாக பிஎஸ்எல்வி சி-56 மூலம் விண்ணில் ஏவப்பட்ட  செயற்கைக்கோள்களில் குறிப்பாக ARCADE (Atmospheric Coupling and Dynamics Explorer), SCOO¡õ-II, VELOX-AM  (Additive Manufacturing) ஆகிய மூன்று செயற்கைக்கோள்களில்  திட்ட மேலாளர், முதன்மை பொறியாளர் பொறுப்பை வகித்துள்ளான். சிங்கப்பூர் சார்பாக ஏவப்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்குவதில்   ஆரம்ப காலம் முதலே பணியாற்றி வந்துள்ளான் என்றனர்.

எனது மகன் தயாரித்த மூன்று ராக்கெட்டுகளும் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம்  எனது மகனின் சிறு வயது கனவு நனவாகி யுள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல இந்தியா விற்கே பெருமை சேர்த்துள்ளது என்றனர். விஞ்ஞானி சண்முகசுந்தரம் கூறுகையில், சிங்கப்பூர் சார்பில் விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆர்கேட் (ARCADE) செயற்கைக்கோள் மிக குறைந்த உயரத்தில் பறந்து, அயனி மற்றும் எலக்ட்ரான் அடர்த்தி அதிகமாக இருக்கும் வளிமண்டலத்தின் மேலடுக்கை  ஆய்வு செய்யவும் மற்றும் காந்த பூமத்திய ரேகையில் உள்ள பிளாஸ்மா குறித்த புதிய தகவல்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஆராய்ச்சியை மிக குறைந்த உயரத்தில் செய்வது இதுவே முதல் முறை என்றார். மற்றொரு செயற்கைக்கோளான ஸ்கூப்-2 (SCOOB-II) சிறிய வகை செயற்கைக்கோள். இது தொலை தூர தகவல் தொடர்பு சம்பந்தமாக ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்றார். தாம் கற்றுக்கொண்டவற்றை தமிழகத்தில் உள்ள  பள்ளி- கல்லூரி மாணவர்களை ஊக்கிவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் வாயிலாக கற்பிக்க முயற்சி எடுக்க உள்ளேன் என்றார்.