science

img

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹொம், அக்.03- இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியமான விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. விஞ்ஞானிகள், ஆய்வு செய்வோர், கலை, இலக்கியத்தில் புலமை வாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான நோபல் பரிசு திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவ தாக செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக பியரி ஆகோஸ்டினி (அமெரிக்கா), பெரெங்க் கிராஸ் (ஜெர்மனி), ஆனி எல் ஹூலியர் (ஸ்வீடன்) ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.