பெய்ஜிங், ஆக. 16- சீனா, சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-3 பி கேரியர் ராக்கெட் மூலம் புவியை ஆய்வு செய்வதற்காக (லேண்ட் எக்ஸ்ப்ளோரேஷன்-4 01) உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளான செயற்கை துளை ரேடாரை (SAR) வெற்றிகர மாக ஏவியுள்ளது. இது பொறியியல் துறையில் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வந்ததன் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோள் ஆகும். இது, புதன்கிழமையன்று சீனாவின் வடக்கு பகுதியில் இருக்கும் ஷாங்க்சி மாகா ணத்தில் உள்ள தையுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 2எஃப் என்ற பெயர் கொண்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைகோளைத் தொடர்ந்து, ஒரு வாரத் திற்குள் ஏவப்பட்ட இரண்டாவது பேரிடர் தடுப்பு தொடர்பான செயற்கைக்கோள் ஆகும். சீனாவின் நிலப்பரப்பு மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளின் வானிலையை தொடர்ந்து கண்காணித்து, நாட்டின் இயற்கை பேர ழிவு கண்காணிப்பு அமைப்பை வலுப் படுத்தி, பேரழிவு ஏற்படுவதை முன்னரே கண்டறிந்து கட்டுப்படுத்துவதிலும், நிவாரணத் திறன்களை விரிவாக உயர்த்துவதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த லேண்ட் எக்ஸ்ப்ளோரேஷன்-4 01 செயற்கைக்கோள் என்பது தொலைநிலை உணர்திறன் கொண்ட ஆராய்ச்சி செயற்கைக் கோள் ஆகும். இது நாட்டின் விண்வெளி உள்கட்டமைப்புக்கான (2015-2025) நடுத்தர மற்றும் நீண்ட கால மேம்பாட்டுத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக் கோள்கள் மற்றும் ஒளியியல் செயற்கைக் கோள்களுடன் (optical satellites) ஒப்பிடும் போது, லேண்ட் எக்ஸ்ப்ளோரேஷன்-4 01 செயற்கைக்கோள் குறுகிய காலத்தில் பலன்களை தருகிறது. அதிக சுற்றுப்பாதை களை கண்காணிப்பதற்காக பெரிய படம்பிடிக்கும் பகுதியுடனும் இருக்கும் இந்த செயற்கைகோளால் தொடர்ந்து மாறும் வானிலையால் பாதிக்காமல் நுண்ணலை களை கண்காணிக்கவும் முடியும். மேலும் இது, துல்லியமாகவும் செயல்திறனுடனும் வானிலையில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் கண்டறிந்து முன் கூட்டியே விஞ்ஞானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்.இதனால் இயற்கைப் பேரி டர்களை முன்னரே உணர்ந்து நாட்டிற்கு ஏற்பட இருக்கும் பெரும் சேதத்தை தவிக்க முடியும். இந்த செயற்கைக்கோளை சீனாவின் விண்வெளி தொழில்நுட்ப அகாடமி உருவாக்கியுள்ளது. வட சீனாவில் உள்ள பெய்ஜிங்-டியான்ஜின் - ஹெபெய் பகுதி மற்றும் வட கிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மற்றும் ஜிலின் மாகாணங்களில் சமீபத்தில் பெய்த கனமழையின் போது விரைவான சேவை களை வழங்க முடிந்ததற்கு காரணம், ஏற்கனவே சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்காக அரசுக்கு சொந்தமான விண்வெளி நிறுவன மான சீனா ஏரோ ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷன் (CASC) அனுப்பிய Gaofen-3 ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் உட்பட 16 செயற்கைக் கோள்களே என்று அந்த நிறுவனம் தெரி வித்துள்ளது.