ஒரு காலத்தில் கொஞ்சம் பயிற்சி இருந்தால் இணையத்தில் உலாவும் போலிச் செய்திகளையும், போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை யும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இது செயற்கை நுண்ணறிவு யுகம். மனிதர்களாலும் அல்லது வேறு எவ்விதமான நவீன தொழில்நுட்பத்தா லும் கொஞ்சமும் கண்டுபிடிக்க முடியாத படி மிகத் துல்லியமாக போலிச் செய்தி களையும், போலி வீடியோக்களையும் நீங்கள் செயற்கை நுண்ணறிவு உதவி யுடன் உருவாக்கி விட முடியும். அதை யெல்லாம் விட மிகப்பெரிய பிரச்சனை இப்படி உருவாக்க உங்களிடம் சில ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். அண்மைக் காலமாக, செயற்கை நுண்ணறிவு வருகை போலிச் செய்திகளை உருவாக்கி, தேர்தல்களில் எவ்விதக் குழப்பங்களை உருவாக்கப் போகிறதோ என்று ஒரு பக்கம் நிபுணர்கள் கவலை கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இரு நாடுகளுக்கு இடையே வருங்காலத்தில் போலிச் செய்திகளுக்கான போர்கள் நடக்கலாம் என ஆய்வுகள் மூலம் தங்கள் அச்சத்தை தெரிவித்து இருக்கிறார்கள். சாட் ஜிபிடி மாதிரியான செயற்கை நுண்ணறிவு அரட்டை மென்பொருட்களை ‘பாட்’ என அழைப்பார்கள். இது ரோபோட் எனும் சொல்லின் கடைசிப் பதம். மேலும் இந்த வகை செயற்கை நுண்ணறிவு புதிய விஷயங்களை உருவாக்குவதால் இதை ஜெனரேட்டிவ் ஏஐ என்று அழைப்பார்கள். மனிதர்கள் இந்த வகை செயற்கை நுண்ணறிவுடன் உரையாடல் வடிவில் பேசலாம். இந்த மென்பொருள் உதவி யுடன் புதிய புதிய ‘பாட்’ களை நீங்கள் உருவாக்கலாம்.
வெறுப்பு ‘பாட்’கள்:
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கச்சிதமாகப் பயன்படுத்தி சில மென்பொருள் மாற்றங்களை செய்வதன் மூலம் சமூக வலைதளங்களில் மனித னைப் போலவே இயங்கும் பாட்களை நீங்கள் உருவாக்கி விட முடியும். அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகள் சில லட்சங்கள் செலவழித்து இதுபோன்ற சில நூறு செயற்கை நுண்ணறிவு பாட்களை உரு வாக்கி சமூக வலைதளத்தில் உலவ விடுவார்கள். அதன் ஒரே வேலை, டிரெண்டிங்கில் என்ன இருக்கிறதோ அதை உள்வாங்கிக் கொண்டு அதற்கு தக்கவாறு வெறுப்புப் பிரச்சாரத்தை உமிழ்வதுதான். ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்த வகை ‘பாட்’கள் உருவாக்கும் சொற்றொடர்கள், மனிதர் கள் உருவாக்கியது போலவே இருக்கும் என்பதால், மக்கள் மிக எளிதாக ஏமாந்து விட வாய்ப்புகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் முழுக்க முழுக்க பயிற்றுவிப்பதன் மூலமே இயங்கும். தொடர்ந்து வெறுப்புப் பிரச்சா ரத்தையும் அது தொடர்பான தகவல்களை யும் கொண்டு பயிற்றுவிப்பதன் மூலம் எந்நேரமும் வெறுப்பை உமிழும் ஒரு சமூக வலைதள ‘பாட்’டை நீங்கள் உருவாக்கி விட முடியும். அதன் பின் 24 மணி நேரமும் அது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கும். அதில் எத்தனை பேர் பலி யாவார்கள் என நம்மால் கணிக்கமுடியாது. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் இன்னொரு வகையான டீப் பேக்ஸ் (Deepfakes) மூலம் போலியான புகைப் படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் உருவாக்கி விடலாம். சில மாதங்கள் முன்பு கூட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது செய்யப்பட்டது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் உலாவின. அது அச்சு அசல் போல் இருந்ததால் ஊடகத்தினரே குழம்பிவிட்டனர். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பரிசோதனைகளை செய்ததில் ஒரு நாட்டிற்கு எதிராக உளவியல் போர் புரிய தேவையான போலிச் செய்திகளை, குறிப்பாக போலிக் கட்டுரைகள், போலிப் புகைப்படங்கள், போலி வீடியோக்களை உருவாக்க வெறும் 400 டாலர் இருந்தால் போதும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் 32,000 போதும்.
போலிச் செய்தியும் மணிப்பூரின் கொடூரமும்
சில வாரங்களுக்கு முன்பு மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டதும், அவர்கள் குடும்பத்தினர் கொல்லப்பட்ட தகவல்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்தப் பெண்கள் அப்படி நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட காரணம் அங்கு வாட்ஸ் அப்பில் வந்த ஒரு போலிச் செய்திதான். கலவரங்கள் நடக்கும் இடங்களில் மேலும் கலவரங்களைத் தூண்டிவிடவும், கலவரமே இல்லாத இடத்தில் கூட கலவரங்களை உருவாக்கவும் செய்துவிடு கிறது போலிச் செய்திகள். போலிச் செய்திகள் வாட்ஸ்அப் உதவி யுடன் மிக வேகமாகப் பரவும் இந்த கால கட்டத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் போலிச் செய்தி களால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில் நுட்பமும் கலைத்துறையில் பல்வேறு புரட்சிகளை செய்யக் காத்திருக்கிறது. இதைப் பயன் படுத்தி வருங்காலத்தில் நம் பிள்ளைகள் அறிவியலைக் கற்பதில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. ஆனால் இது கொடுக்கும் பலன்களை எல்லாம் அப்படியே விழுங்கி விஷத்தை கக்குவதைப் போல, இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அரசியல் கட்சி கள் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ என்ற கவலையும் நமக்கு வருகிறது. ஒரு பக்கம் அரசியல் கட்சி என்றால், மறுபக்கம் நாடுகள் இன்னொரு நாடுகளின் மீது உளவியல் போர் தொடுக்க இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், அதன் விளைவுகள் நிச்சயம் ஒரு நொடி யில் கொல்லும் வெடிகுண்டை போல அல்ல; உயிருடன் இருக்கும் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் மிக மோசமான ஒரு உளவியல் தாக்குதலாக இருக்கும். இதிலிருந்து எல்லாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு மக்களிடம்தான் உள்ளது. இதைப் பற்றி தெரிந்து கொள்வது முதல் கட்டம் என்றால், இதைப் பற்றி தயங்காமல் கேள்விகள் கேட்க வேண்டியது அடுத்த கட்டம்.