science

img

சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம் நேரலையில் எங்கு காணலாம்?

சென்னை, ஆக.22- நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திர யான் -3 விண்கலத்தில் அனுப்பப் பட்ட சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் புதன்கிழமை (ஆக.23) மாலை நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வரலாற்று  நிகழ்வை அனைவரும் கண்டு  களிக்கும் வகையில் நேரலை செய்வ தாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தரையிறங்கும் நேரத்தில் சற்று  மாற்றம் செய்யப்பட்டது. இதற்கி டையே சந்திரயான் தரையிறங்கு வது 27 ஆம் தேதிக்கு தள்ளிப்போக லாம் என்ற செய்தி வெளியானது. தற்போது லேண்டர், நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது. அதன் செயல்பாடு  திருப்திகரமாக உள்ளது திட்ட மிட்டப்படி ஆக.23 அன்று தரையிறங் கும் என்றும் இந்த நிகழ்வை நேரலை  செய்யவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்தில், இஸ்ரோ  யூடியூப் பக்கத்தில், முகப்புப் பக்கத்தில் நேரலையில் காணலாம்.  மேலும், டிடி நேஷனல் தொலைக் காட்சியில் நேரலை ஒளிபரப்பப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.