நிலவின் தென் துருவத்தில் விண்கலனை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற ஒரே வாரத்தில் இந்திய விஞ்ஞானிகள் சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 என்ற விண்கலனை அனுப்ப தயாராக உள்ளனர். பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியன் மற்றும் அதன் காற்று (solar wind) உள்ளிட்ட விண்வெளி வானிலையை ஆய்வு செய்ய இந்தியா முதல் விண்வெளி ஆய்வை தொடங்குவதே இத்திட்ட நோக்கம். சூரியனை ஆய்வு செய்வது இது முதல் முறை அல்ல. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக ஆர்பிட்டர்களை வைத்துள் ளன. ஆனால் இந்தியாவின் திட்டம் சில தனித்து வமான அம்சங்களைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்கலம் புறப்படும். இந்த விண்கலம் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பூமியில் இருந்து 15லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். (பூமிக்கும் சந்திரனுக்கும் இடை யிலான தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்)
விண்கலன் ஏவியதில் இருந்து இலக்கை அடைய ஆதித்யா-எல்1 க்கு சுமார் நான்கு மாதங்கள் ஆகும். இது சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலை யில் இருக்கும் புள்ளியில் நிலை நிறுத்தப் படும். இந்த புள்ளியில் ஒரு விண்கலம் குறை வான எரிபொருளைப் பயன்படுத்தி சமநிலை யில் இருக்க முடியும். இந்த புள்ளிக்கு பிரெஞ்சு கணிதவியலாளர் ஜோசப்-லூயி லக்ராஞ்ஜின் பெயர் சூட்டப்பட்டு லக்ராஞ்ஜ் புள்ளி எல்-1 என அழைக்கப்படுகிறது. இந்த விண்கலம் மொத்தம் ஏழு உபகர ணங்களைச் சுமந்து செல்லும். ஃபோட்டோஸ் பியர் மற்றும் குரோமோஸ்பியர் என அறி யப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை, மின்காந்த மற்றும் துகள் புலங்களைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்திக் கண்காணிக்கும். இது விண்வெளி வானிலையை நிர்வகிக்கும் காரணங்களை ஆராயும். எடுத்துக்காட்டாக, சூரியக் காற்றின் இயக்கவியலைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டவுடன், இந்த விண்கலம் ‘‘தடங்கல் இல்லா மல் சூரியனைப் பார்க்க வேண்டும்.இது சூரியச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை யில் அதன் தாக்கத்தை கவனிக்க உதவும்” என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
நமது வளிமண்டலத்தால் தடுத்து நிறுத்தப் படும் கதிர்வீச்சையும் இது ஆய்வு செய்யும். இத னை பூமியிலிருந்து ஆய்வு செய்ய முடியாது. அதன் இடத்திலிருந்து விண்கலத்தின் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ராஞ்ஜ் பாயிண்ட் எல்-1-இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை அந்த இடத்தி லேயே ஆய்வு செய்யும். இது கிரகங்களுக்கு இடையிலான விண்வெளியில் சூரிய இயக்கவியலின் விளைவு பற்றிய முக்கியமான தகவல்களை நமக்கு வழங்கும். சூரியனின் இயற்பியல் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல் போன்ற சூரிய அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று இஸ்ரோ நம்புகிறது.
ஆதித்யா-எல்1 திட்டத்துக்கான செலவு
இந்திய அரசாங்கம் 2019-இல் சுமார் 380 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இஸ்ரோ இந்தத் திட்டத்திற்கான உண்மை யான செலவின் விவரங்களை இன்னும் வெளி யிடவில்லை. மேலும் இந்த விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளியில் ஆழமாகச் செய்ய வேண்டியப் பயணங்களுக்கு குறைந்த சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்துகிறது. மேலும், அதிக தூரம் பயணிக்க ஈர்ப்பு விசை யைப் பயன்படுத்துகிறது. இது சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற இடங்களை அடைய எடுக்கும் நேரத்தை அதிகரிக்கிறது, ஆனால் இது கனரக ராக்கெட்டுகளுக்கு ஆகும் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது. இஸ்ரோ ஒப்பீட்டளவில் குறைவான பட்ஜெட்டில் இயங்கி, சமீபத்திய காலங்களில் பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறது. ஆளில்லா விண்கலமான சந்திரயான்-3, கடந்த வாரம் நிலவின் மேற்பரப்பில் தரை யிறங்கியபோது, அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா ஆனது. 2014-ஆம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஒரு விண்கலத்தைச் செலுத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமை யை இந்தியா அடைந்தது. அடுத்த ஆண்டுக்குள் பூமியின் சுற்றுப் பாதையில் மனிதர்களை அனுப்பும் மூன்று-நாள் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.