science

img

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்  

3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.  

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இரண்டாம் ஏவுதளத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.    

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், என்இயு-சாட், ஸ்கூப் 1 உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-3 ராக்கெட் தாங்கி செல்லும் டிஎஸ்-இஓ செயற்கை கோள்கள் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதை நிலைநிறுத்தப்படுகிறது.

இதில் செலுத்தப்படும் புவி கண்காணிப்பு செயற்கைகோளான டிஎஸ்-இஓ செயற்கைக்கோள் 365 கிலோ எடையுள்ளது. மற்றொரு செயற்கை கோளான  என்இயு-சாட் 155 கிலோ எடை கொண்டது. இவை இரண்டும் சிங்கப்பூரை சேர்ந்தவை எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், மூன்றாவது செயற்கைக்கோள் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1  ஆகிய 3 செயற்கை கோளையும் இஸ்ரோ  விண்ணில் ஏவப்படுகின்றன. 

;