science

img

நாங்குநேரி அருகே விபத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி

முதல்வர் இரங்கல் - சிபிஎம் நேரில் அஞ்சலி

சந்திரயான்-3 தொடர்பாக திரு வனந்தபுரத்தில் உள்ள விஞ் ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டி எடுத்துவிட்டு, செய்தியாளர் குழுவினர் காரில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த னர். நள்ளிரவில் நாங்குநேரி நான்கு வழி சாலையில் தனியார் மில் அருகே  வந்த போது, கார் திடீரென்று கட்டுப்  பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை  ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்  காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாக ராஜன்(45), நியூஸ் 7 தமிழ் கேமிரா மேன் வள்ளிநாயகம்(38) ஆகியோர் படு காயமடைந்தனர். மற்றொரு புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமரா மேன் நாராயணன் (35) காயமின்றி தப்பி னார். அக்கம், பக்கத்தினர் மூவரையும்  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்  காக நெல்லை அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். நாங்குநேரி போலீசார் உயிரிழந்த  சங்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். நெல்லை செய்தியாளர்கள் அனை வரும் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கிய சக செய்தியாளர்களுக்கு உதவி செய்தனர்.தகவலறிந்த திரு நெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன்,

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலா ளர்களிடம் நலம் விசாரித்தார். விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்க ரன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுட லைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கு.பழனி ஆகியோர் மறைந்த சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் நிவாரணம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாலைவிபத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்  (வயது 33) உயிரிழந்தார் என்ற துயர மான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உற வினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தி னருக்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சத்திற்கான காசோலை யினை அவரது குடும்பத்தினருக்கு திரு நெல்வேலி கோட்டாட்சியர் கார்த்தி காயினி வழங்கி ஆறுதல் கூறினார்.