ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக 3 ஆவது சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டு, தற்போது 296 கி.மீ x 71767 கி.மீ என்ற புதிய சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஆதித்யா-எல்1 விண்கலம் கடந்த செப் 3 மற்றும் 5-ஆம் தேதிகளில் முதல் மற்றும் 2-ஆம் சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்ட நிலையில், என்று அதிகாலை 2.45 மணிக்கு 3 ஆவது சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டு, தற்போது 296 கி.மீ x 71767 கி.மீ என்ற புதிய சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அடுத்த கட்ட செயல்பாடு வரும் 15-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.