science

img

அறிவியல் கதிர்

உருமறைப்பு
விலங்குகள் தங்கள் எதிரியிடமிருந்து தப்பிக்க உருமறைப்பு (camouflage)எனும் உத்தியைக் கையாள் கின்றன. இதில் பின்புலத் துடன் ஒட்டி மறைந்துகொள்ளும் தந்திரம், குச்சி இலை போன்ற பொருட்கள்போல தோற்றமளிக்கும் உத்தி என இருவகை உள்ளன. இது குறித்து ஆய்வு செய்த நடத்தை மற்றும் புலன் சூழலியலாளர் ஜாவோ விக்டர் அல்காந்திரா வியானா (João Vitor de Alcantara Viana) அதன் முடிவுகளை சப்டம்பர் 14 Proceedings of the Royal Society இதழில் வெளியிட்டுள்ளனர். உருமறைப்பினால் இரைபிடிக்கும் நேரம் 62% அதிகரித்தும்  தாக்குதலின் வீதம் 27% குறைந்தும் உள்ளன. உருமறைப்பு இரையின் தன்மையைப் பொறுத்தும் உள்ளது. எடுத்துக்காட்டாக வண்ணத்துப் பூச்சிகளை விட கம்பளிப் பூச்சிகளுக்கு உருமறைப்பு அனுகூலமானது. வண்ணத்துபூச்சிகள் வேறுவிதமான உத்திகளைப் பெற்றிருக்கும். இரண்டு உத்திகளில் பொருட்கள் போல தோன்றும் உத்தி சிறப்பனதாக உள்ளதாம் .அது இரை தேடும் நேரத்தை 300% அதிகரிக்கிறது. ஆனால் இந்த உத்தி விலங்கின் அளவு,நகர்விற்கான தேவை ஆகியவற்றைப் பொறுத்ததது என்பதால் எல்லா உயிரனங்களும் இந்த உத்தியை பரிணமித்திருக்காது. தான் தோற்றமளிக்கும் பொருட்களின் அளவை ஒத்திருக்கும் விலங்குகளே இதன் மூலம் பலனடைய முடியும். இந்த உத்தி ஏன் சிறப்பானதென்றால் எதிரி அவற்றை சுற்றுப்புறத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாமல் அல்ல;மாறாக அவற்றை தங்களுக்கு ஆர்வம் இல்லாத இலை,மரத் துண்டு என நினைத்துவிடுவதுதான். இந்த ஆய்வுகளில் உருமாறாத வெவ்வேறு பொருட்களை ஒப்பீடாக வைத்து சோதனை செய்யப்பட்டிருப்பதால் இயற்கை சூழலில் உருமாற்றம் இதைவிடைக் குறைவான பலனே கொடுக்கும் என்கிறார் ஒரு ஆய்வாளர்.மேலும் இவையெல்லாம் வடகோளத்திலேயே நடத்தப்பட்டிருப்பதால் தென்கோளத்திலும் செய்யப்பட்டாலே முழுமையடையும்.

செயற்கை மோதல் 
செப்டம்பர் 27அன்று நாசா தன்னுடைய டார்ட் விண் கலத்தை 24000கிமீ வேகத்தில் ஒரு எரிகல் மீது மோத வைத்தது. அந்த எரிகல்லால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும் விண்கலம் அந்த எரிகல்லை விலக்கும் திறனைக் கண்டறிவதற்காக இந்த மோதல் செய்யப்பட்டது. எதிர்காலத் தில் ஏதாவது எரிகல் பூமியில் மோதும் ஆபத்து கண்ட றியப்பட்டால் இந்த செயல்முறை பயன்படும்.

மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் இழுபறி 
  காக்கட்டூ (cockatoo) எனப்படும் வெள்ளைக் கிளிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணவுக்காக குப்பை தொட்டிளைக் கவிழ்த்து வீதியெங்கும் குப்பைகள் சிதறவைக்கின்றன. இதை தடுப்பதற்கு மக்கள் பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனில்லையாம். செங்கற்கள். கழிகள், காலணிகள் போன்றவற்றை பயன் படுத்தி பார்த்தும் கிளிகள் அவற்றை அகற்றக் கற்றுக் கொண்டுவிடுகின்றனவாம். மக்களுக்கும் பறவைகளுக்கும் இடையில் நடைபெறும் இந்தப் போரை ஆய்வா  ளர்கள் கவனித்து வருகின்றனர். ஒரு குழுவாக இயங்கி கருவிகளோ வழிகாட்டும் புத்தகங்களோ இல்லாமல் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதை மக்கிவேர்ட் (MacGyvered) தீர்வு என்று சொல்லப்படுகிறது.அப்படிப்பட்ட அணுகுமுறையை கிளிகள் கையாள்கின்றனவாம். கிளிகளை அச்சுறுத்த ரப்பர் பாம்புகளை வைப்பது வேலைக்கு ஆகவில்லை. செங்கற்களை முரட்டுத்தனமான வலிமையோடு கிளிகள் தள்ளிவிடு கின்றனவாம். குப்பைகலங்களின் மூடிக்கு மேலிருந்து கனமான பொருட்களை தொங்கவிடுவது,மூடியை திறவாதவாறு ஆப்பு வைப்பது போன்றவை ஓரளவுக்கு பாதுகாக்கிறதாம். இப்படிப்பட்ட ஏற்பாட்டை எந்தப் பறவைக் கூட்டமும் கவிழ்ப்பதை இதுவரை காணவில்லை. ஒவ்வொரு தடையையும் வெல்வதை கிளிகள் கற்கின்றனவாம். பறவைகளும் மனிதர்களும் தங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன்களையும் கணக்கிடுகிறார்கள் என்கிறார் நியூயார்க் பல்கலைகழகத்தை சேர்ந்த நடத்தை சூழலியலாளர் ஆனி கிளார்க். மக்களைப் பொறுத்தவரை கனமான பொருட்களை தொங்கவிட நேரம் இல்லாமலிருக்கலாம்.சிலர் சிறுவர்களிடம் குப்பை போட சொல்லலாம்.அவர்களால் கனமான செங்கற்களை தூக்க இயலாது.பறவைகலைப் பொறுத்தவரை திறப்பதற்கு நேரமாகும் குப்பைதொட்டிகளை புறக்கணிக்கலாம்.ஒரு பகுதியில் மிக பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் நிற்காமல் சென்றுவிடலாம்.

♦ சிறுநீரகத்தை பாதுகாக்க புதிய முறை 
கொடையாக அளிக்கப்பட்ட சிறுநீரகங்களை நீண்ட நேரம் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறையை ஆய்வாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்சிஜன் கலந்த இரத்தத்தை சிறுநீரகத்திற்குள் செலுத்துவதன் மூலம் (normothermic perfusion method) உறுப்புக்குள் இரத்த ஓட்டம் பாவித் தலை (simulation)ஏற்படுத்துகின்றனர். இப்போதுள்ள குளிர் சேமிப்பு முறையில் உறுப்புகள் பனிக்கட்டியினால் சேதமடையும் அபாயம் அதிகம் உள்ளது.

♦ தாவரங்களின் ஆற்றல் 
தாவரங்களின் இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. ஒரு உயரமான மரம் இதற்காக வேரிலிருந்து நூற்றுக்கணக்கான லிட்டர் தாது உப்புக்கள் கலந்த நீரை மேலே செலுத்த வேண்டும். புற்கள், சிறிய செடிகள் கூட எப்படியாவது புவிஈர்ப்பு விசையை வென்றும் திசுக்களின் தடுப்பை மீறியும் சத்து நீரை மேலே செலுத்த வேண்டும். இலைகளிலிருந்து நீராவிப்போக்கினால் வெளியேறும் நீரினால் இந்த உறிஞ்சுதல் நடைபெறுகிறது என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பருவநிலையாளர் கிரேகரி குய்டின். இந்த உறிஞ்சுதலுக்காக உலகிலுள்ள தாவரங்கள் எவ்வளவு ஆற்றலை செலவிடுகின்றன எனபதை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஒரு சதுர மீட்டருக்கு 0.03 வாட் ஆற்றல் தேவைப்படுகிறதாம். காடுகளில் இதுவே 0.06வாட்கள் செலவாகின்றது. மொத்தத்தில் 9.4 குவாட்ரில்லியன் (1015 -1024). இது நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 90% அளவாகும்.  

♦ லுப்பா நோய்க்கு புதிய சிகிச்சை 
நம் உடலிலுள்ள சில நோய் எதிர்ப்பு புரோட் டீன்கள் ஆரோக்கியமான திசுக்களையும் செல் களையும் அழித்து விடுகின்றன. இதை லுப்பா  நோய் என்று அழைக்கிறார்கள். இதை குணப் படுத்த மருந்துகள் இருந்தாலும் அவை எல்லோ ருக்கும் வேலை செய்வதில்லை.இப்போது சோதனை முயற்சியாக மரபணு மாற்றம் முறையில் இதைக் குணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சோதனையில் பங்கு கொண்ட ஐந்து நோயாளி களின் உடலிலிருந்து டி செல்களை எடுத்து மரபணு மாற்றம் செய்தனர். இவை ஆரோக்கியமான திசுக்களை அழிக்கும் பி செல்களை பின்பற்றி அவற்றை அழித்தன. மூன்று மாதங்கள்வரை நோய் திரும்பவில்லை. சோதனையில் பங்கெடுத்தவர்களில் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் வரை நோய் மீண்டும் வரவில்லை. மற்ற நான்கு பேருக்கு ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை திரும்ப வில்லை. ஆனால் பி செல்கள் அம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற தொற்று நோய்களை தடுக்க அவசியமானவை. நல்வாய்ப்பாக சில மாதங்கள் கழித்து எலும்பு மஜ்ஜைகள் அவற்றை மீண்டும் உற்பத்தி செய்யத் தொடங்கின. லுப்பா மீண்டும் வரவில்லை. இந்த சிகிச்சை எல்லோ ருக்கும் பயன்படுமா என்று தெரியவில்லை. ஆரம்ப கட்டத்தி லுள்ளவர்களுக்கு பயன்படலாம்.