science

img

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது

வாஷிங்டன், பிப். 12 - நாசா உருவாக்கிய கார் போன்ற வடி விலான ரோபோவான “கியூரியாசிட்டி ரோவர்” 2011-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. 2012 ஆகஸ்ட் 6 அன்று  56 கோடி கிமீ பயணத்துடன் வெற்றிகர மாகச் செவ்வாய் கிரகத்தை வந்தடைந்த கியூரியாசிட்டி ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் மலையின் அடிவார நிலத்தில் உடைப்பை கண்டறிந்த நிலையில், தற்போது பாறைகளின் படங்களை எடுத்து, நீர் அலைகள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளது. கியூரியாசிட்டி ரோவர் வெளியிட்டுள்ள படத்தில் ஒரு கடற்கரையில் அலைகள் குறைவதால் விட்டுச்செல்லும் அலை அலையான வடிவங்களைப் போன்ற தடங்கள் உள்ளது. அவை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற ஏரியின் மேற்பரப்பில் அலைகளால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என கியூரியாசிட்டி ரோவர் மிஷன் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்.

ஏரியின் மேல் கியூரியாசிட்டி ரோவர் நகர்வதால் கீழே இருந்து வண்டல் படிந்ததால் பாறைகளில் காணப்படும் சீப்பு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. நாசாவின் கியூரியாசிட்டி திட்ட விஞ்ஞானி அஷ்வின் வாசவாடா ஒரு அறிக்கையில், “கியூரியாசிட்டி ரோவரின் முழு பயணத்திலும் நாம் பார்த்த நீர் மற்றும் அலைகளின் சிறந்த சான்று இது வாகும். கியூரியாசிட்டி ரோவரின் கண்டு பிடிப்பு ஆச்சரியமாக உள்ளது. தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதி  வறண்ட பகுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால்,  மற்ற பகுதிகளை விட வறண்ட அமைப்பு களில் பாறை அடுக்குகள் வளர்ந்தன. சல்பேட்டுகள் அல்லது உப்பு தாதுக் களால் தண்ணீர் வறண்டு போகும்போது மேற்பரப்பில் அலைகளால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.  இதுபோன்ற ஆதாரங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆனால் வறண்டு இருக்கும் என்று நாங்கள் எதிர் பார்த்த இடத்தில் தண்ணீர் இருப்பதாய் கண்டுபிடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று வாசவடா கூறினார்.

;