மதுரை:
தமிழக அரசியல் களத்திற்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ளமுடிவு “ஆரோக்கியமான அரசியல் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்” என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்டேசன் கூறினார்.
மதுரையில் நடைபெற்ற அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஐந்தாவது மாநிலப்பேரவையில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தில்லி விவசாயிகள் போராட்டம் எழுச்சியுடன் அரசியல் உத்வேகத்துடன் நடைபெற்றுவருகிறது. அவர்களது போராட்டம் வெல்லும். தில்லி விவசாயிகள் போராட்டம் உலகப் போராட்ட பேரெழுச்சியின் ஒரு பகுதியாகும். இப்படியொரு போராட்டம் நடப்பது இந்தியாவில் இது முதன் முறை.மத்திய அரசின் வேளாண் சட்ட அறிக்கை மொத்தமே 18 பக்கம் தான். போராடும் விவசாயிகளுக்கு அரசு அளித்துள்ள விளக்கம் 19 பக்கத்திற் கும் அதிகம். அறிக்கையை விட விளக்கம் அதிகமாக உள்ளது. அப்படியென்றால் பாதகமான அம்சங்களை மறைப்பதற்காகத்தான் இப்படியொரு விளக்கத்தை மத்திய அரசு அளித்துவருகிறது. இந்த நிலையில் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது நகைப்பிற்குரியது.அரசியல் பங்கேற்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியல் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.