politics

img

அரசியல் ஆதாயத்திற்காக மக்களை துன்புறுத்தினால் மாநிலங்கள் சிதறுண்டபோக நீண்டகாலம் ஆகாது.... சிவசேனா கடும் விமர்சனம்....

மும்பை:
அரசியல் ஆதாயத்திற்காக மக்களை துன்புறுத்தினால்  மாநிலங்கள் சிதறுண்ட போக நீண்டகாலம் ஆகாது என்று சிவசேனா கட்சி கடுமையாக  விமர்சித்துள்ளது.

மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாகி, கவலையளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது. இப்படியே சென்றால், சோவியத் யூனியன் போல்மாநிலங்கள் சிதறுண்டுபோக நீண்டகாலம் ஆகாது என்று சிவசேனா கட்சிவிமர்சித்துள்ளது.சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் ஞாயிறன்று வெளிவந்துள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

“அரசியல் ஆதாயத்துக்காக மக்களைத் துன்புறுத்துகிறோம் என்றுமத்திய அரசு உணராவிட்டால், சோவியத் யூனியன் போல், மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது. 2020 ஆம் ஆண்டு என்பது மத்திய அரசின் செயல்திறன், நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியுள் ளது. பல்வேறு விவகாரங்களிலும் உச்சநீதிமன்றம் தனது கடமையை மறந்துவிட்டது.பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தார். அதில், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தினார் என விஜய் வர்க்கியா தெரிவித்தார்.என்ன, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்க சிறப்பு கவனத்தை பிரதமர் எடுத்துக்கொண்டாரா? நாட்டுக்கு உரித்தானவர் பிரதமர். கூட்டாட்சி அடிப்படையில் இந்த தேசம் உள்ளது.மாநிலத்தில் பாஜக ஆட்சி இல்லாத அரசுகள் கூட நாட்டின் நலன்பற்றித்தான் சிந்திக்கின்றன. ஆனால், இந்தச் செயலால் இந்த உணர்வு கொல்லப் பட்டு வருகிறது.

மிகப்பெரிய பேரணிகள், ஊர்வலங்கள் உள்துறை அமைச்சர் தலைமையில் இந்நாட்டில் நடக்கின்றன. அதேநேரத்தில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க இரவுநேரஊரடங்கும் அவசியம். ஆட்சியாளர்கள் விதிகளை மீறினால், மக்கள்தான் விலை கொடுக்கிறார்கள்.நடிகை கங்கணா ரணாவத்தையும், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியையும் பாதுகாக்க மத்திய அரசு முயல்கிறது. இந்திய எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமித்த போதிலும் அதைப் புறமுதுகிட்டுஅனுப்ப அந்த தேசம் முயவில்லை. இந்த விவகாரத்தை திசை திருப்ப தேசியவாதம் முன்வைக்கப்பட்டு, சீனப் பொருட்களை வாங்க வேண் டாம் எனக் கூறி சீன முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.

உலகமே கொரோனாவில் பாதிப்படைந்தது. அமெரிக்க அரசு, பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கிய தனது மக்ககளுக்குச் சிறந்தநிதியுதவியை வழங்கியது. இதனால்மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் பணம்அமெரிக்க மக்களின் வங்கிக்கணக் கில் செல்லும். இதேபோன்று பிரேசில்நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும்நடந்தன. ஆனால், இந்திய மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் வெறும் கையுடன்தான் உள்ளனர்.புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடம் எந்தச் சூழலையும் மாற்றிவிடாது. ரூ.1000 கோடி செலவுசெய்து கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்துக்கான பணத்தை மக்களின் சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். மக்கள் இதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;