internet

img

மிக அருகில் தொலைதூரக்கல்வி

தபால் மூலம் படிப்பது அல்லது தொலைதூரக்கல்வி என்று அழைக்கப்படும் படிப்பு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். குடும்பச்சூழல் காரணமாகவோ அல்லது வேலைவாய்ப்பு காரணமாகவோ கல்லூரிக்குச் செல்ல முடியாதவர்களுக்கு தொலைதூரக்கல்வி பெரிய அளவில் உதவுகிறது.தினமும் சென்று வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், பல மணிநேரங்கள் சிறப்பு வகுப்புகளோடு கூடிய கல்வியை தொலைதூரக்கல்வி தருகிறது. கிட்டத்தட்ட, கல்லூரிகளில் கிடைக்கும் அனைத்துப் படிப்புகளும் இதிலும் உள்ளது. வேலைவாய்ப்புக்கோ அல்லது வேலையில் இருக்கையில் பதவி உயர்வுக்கோ எந்தவித பாரபட்சமும் இன்றி தொலைதூரக்கல்வியில் பெறும் பட்டப்படிப்புகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதில் பயின்று உயர்ந்த பணிகளில் இருப்பவர்களும் உள்ளனர். கீழ்க்கண்ட பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி வழங்கப்படுகின்றன. 

1. சென்னைப் பல்கலைக்கழகம்

2. அண்ணா பல்கலைக்கழகம்

3.மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

4.அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

5. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.

6. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

7. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

8. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

9. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

பலன்கள்

கட்டணம் குறைவு

படிப்பைத் தொடர உதவுகிறது

எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.

எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்

எப்போது படிப்பது என்பதையும் நாம் முடிவு செய்யலாம்.

வருமானம் ஈட்டிக் கொண்டே படிக்கலாம்.

10.அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்இந்தப் பல்கலைக்கழகங்களின் தொடர்பு மையங்கள் நாட்டின் பல முக்கியமான நகரங்களில் அமைந் துள்ளன. நாம் இருக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே சேர்க்கையை மேற்கொள்ள இந்த மையங்கள் பெரும் அளவில் உதவுகின்றன. வகுப்புகள், தேர்வுகள் போன்றவற்றை அந்த மையங்களில் வாயிலாகத் தெரிந்து கொள்ளவும் இயலும். 

இளங்கலைப்பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் முடித்து விட்டு, முதுகலைப் படிப்பை கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பினால் அதற்கு எந்தவிதத் தடையும் இருக்கப் போவதில்லை. தாராளமாக சேர்ந்து கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம் மட்டும் குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே தொலைதூரக்கல்வியைத் தருகிறது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்.சி(கணினி அறிவியல்) ஆகிய பிரிவுகள் மட்டுமே உள்ளன. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் படிப்பைக் கைவிடாமல் இருப்பதற்கு இந்தத் தொலைதூரக் கல்வி பெரிய அளவில் உதவுகிறது. இவர்களால் தாக்குப் பிடிக்கும் அளவில்தான் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மையங்களும் பல இடங்களில் இருப்பதால் எந்தப் பல்கலைக்கழகத்தையும் அனைவரும் தேர்வு செய்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் தொலைதூரக்கல்வியை வழங்குகின்றன. இவற்றைத் தேர்வு செய்யும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, தலையில் கைவைத்து அமர்வதை செய்திகளில் பார்க்கிறோம். புதிய பல்கலைக்கழகம் என்றால் நன்கு விசாரித்துவிட்டு அதில் சேருவது நல்லது. ஏற்கனவே இயங்கி வரும் பல்கலைக்கழகம் என்றால், அங்கு படித்துப் பட்டம் பெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வெறும் இடைத்தரகர்கள் சொல்வதை நம்பி மட்டும் சேருவது நல்லதல்ல.