internet

img

குழந்தைகள் தினத்தை ஒட்டி சிறப்பு கூகுள் டூடுள்!

குழந்தைகள் தினத்தை ஒட்டி, இந்தியாவை சேர்ந்த பள்ளி மாணவி தீட்டிய ஓவியத்தை கூகுள் டூடுளாக கூகுள் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவாக நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தை ஒட்டி, கூகுள் நடத்திய போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களில் குர்கானை சேர்ந்த திவ்யான்ஷி சிங்கால் என்ற 7 வயது மாணவி வரைந்த ஓவியத்தை கூகுள் தேர்வு செய்துள்ளது. அந்த ஓவியத்தையே இன்று சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் இயற்கையோடு பயணிக்க வேண்டும். இதற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஓவியத்தை சிறுமி வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.