போலி தகவல்கள் அடங்கிய கொரோனா வைரஸ் தொடர்பான விளம்பரங்கள் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் பலியாவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக உயர்ந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழலில், பேஸ்புக் தளத்தில் கொரோனா வைரஸ் குறித்த போலி தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்கக்கோரி கடும் அழுத்தத்தை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து போலி தகவல்கள் அடங்கிய கொரோனா வைரஸ் தொடர்பான விளம்பரங்கள் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோன்று இன்ஸ்டாகிராமிலும், கொரோனா வைரஸ் தொடர்பான போலி தகவல்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.