india

img

கொரோனாவில் அம்பலப்பட்டுப் போன ‘குஜராத் மாடல்’ ஆட்சி.... ‘மோடியின் 7 ஆண்டுகள்’ குறித்து காங்கிரஸ், என்சிபி கட்சிகள் விமர்சனம்.....

மும்பை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, புதன்கிழமையுடன் (2021, மே 26 தேதியுடன்) 7 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

‘குஜராத் மாடல்’ என்று பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வந்தது, கொரோனா மூலம் அம்பலப்பட்டு விட்டது என்று கடுமையாக சாடியுள்ளன.7 ஆண்டுகால ஆட்சியில் பாஜக-வின் நிர்வாக படுதோல்வியை மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் காட்கில் பட்டியலிட்டு உள்ளார். ‘2014-ஆம் ஆண்டு ‘குஜராத் மாடல் ஆட்சி’ என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, கொரோனா பரவல் காரணமாக அம்பலமாகி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாத குஜராத் மாநிலத்தின் கையாலாகாத தன்மையை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது.பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் சுடுகாட்டில் இடம் இல்லாமல் திறந்தவெளியில் இறுதி சடங்குள் செய்யப்படுவது, ஆற்றில் உடல்கள் வீசப்படுவது போன்ற சம்பவங்கள், சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளன. கோவா மாநிலம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகளை சந்தித்து வருகிறது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் நிலைமை இருண்டதாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு பாஜக- முன்வைத்த ‘குஜராத் மாடல் ஆட்சி’ நாடு முழுவதுமே அம்பலப்பட்டு நிற்கிறது’ என்று ஆனந்த் காட்கில் விமர்சித்துள்ளார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக்,‘வருங்காலத்தில் இந்திய மாதிரி ஆட்சியை யாரும் கையாள மாட்டார்கள்’ என்று விமர்சித்துள்ளார்.

‘கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்படுவது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது, தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலையில் தடுப்பூசி திட்டத்தை அறிவிப்பது. இத்தகைய மாதிரிகள் யாராலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;