india

img

தில்லு-முல்லு மூலம் பாஜக வென்றதாக அறிவிப்பு

புதுதில்லி, பிப். 5 - “சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகப் படுகொலை” என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தேர்தலை நடத்திய விதம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத் தாக்கும் செயல் என்றும், தேர்தல் நடத்திய அதிகாரி, மிகவும் வெளிப்படை யாகவே தில்லு முல்லுகளை அரங்கேற்றி யிருப்பது தெரிகிறது என்றும் கூறியுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சண்டிகர் மாநகராட்சிக் கூட்டத்தை கூட்டத் தடை விதித்தும் அதிரடியாக உத்தர விட்டுள்ளார்.

35 கவுன்சிலர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜகவிற்கு 14  கவுன்சிலர் களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர் களும், காங்கிரசுக்கு 7  கவுன்சிலர்களும், சிரோமணி அகாலிதளத்துக்கு ஒரு கவுன் சிலரும் உள்ளனர். இவர்கள் தவிர, பாஜக எம்பி-யான கிரோன்கெருவும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றவர் ஆவார்.

 இந்நிலையில், சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் ஜனவரி 18 அன்று நடைபெறுவதாக இருந்தது. இதில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட முடிவு செய்ததால், இந்த கூட்டணி 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் சூழல் உருவானது. ஆனால்,  வாக்குப்பதிவின் போது, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே அனு மதிக்காமல் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மாஷி போலீஸ் மூலம் தடையை ஏற்படுத்தி னார்.

இதற்கு எதிராக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் நீதிமன்றம் சென்றன. வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் ஜனவரி 30 அன்று முறையாக வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மாஷி, காங்கிரஸ் - ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 36 பேரில், 8 பேரின் வாக்குகளை செல்லாது என அறிவித்து, 16 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் மேயராக வெற்றி பெற்றதாகவும், 12  வாக்குகளுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்ததாகவும் ஒருதலைப்பட்சமாக அறிவித்தார்.

அத்துடன், மூத்த துணைமேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக் கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி  கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். போராட்டத் திலும் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை யின் போது வாக்குச் சீட்டை செல்லாமல் ஆக்குவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரி யே, அதில் எழுதும் காணொலிகளும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், எவ்வித விளக்கமும் அளிக்காமல், 8 வாக்குகள் செல்லாது என  அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், மேயர் தேர்தல் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரியும் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி நாடியது.

ஆனால், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக் கால தடை விதிக்க பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, திங்களன்று விசாரித்தது.

 அதைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “சண்டிகர் தேர்தல் அதிகாரியின் செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும்... இதுதான் தேர்தல் நடத்தும் முறையா..? நடந்த நிகழ்வு கள் எங்களுக்கு திகைப்பை ஏற்படுத்துகின்றன.. சண்டிகர் மேயர் தேர்தலை ஜனநாயகப் படுகொலை செய்யும் நிகழ்வாகவே பார்க்கி ன்றேன் என்றும் இதுபோன்ற ஜனநாயக படுகொலையை அனுமதிக்க முடியாது” என்றும் கடுமையாக கூறினார்.

மேலும், “வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த தேர்தல் நடத்திய அதிகாரி மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்; அவரை விசாரிக்க வேண்டும்; தேர்தல் வாக்குச்சீட்டுகள், காணொலிகள் மற்றும் இதர கோப்புகளை சரிபார்க்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி, பிப்ரவரி 7 அன்று சண்டிகர் மாநகராட்சிக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அடுத்த உத்தரவு வரும்வரை மாநகராட்சிக் கூட்டத்தை நடத்தக்கூடாது” என்றும் தடை விதித்துள்ளார்.