india

புதிய நாடாளுமன்றத் திறப்பு, ராமர் கோவில் விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காலம் பதிலடி தரும்!

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவிற்கும், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் நடிக, நடிகர்களை யெல்லாம் அழைத்த மோடி அரசாங்கம், குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு 
எதிர்காலம் பழிவாங்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஏ.எம். ஆரிப் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. பிப்ரவரி 5அன்று குடியரசுத் தலைவர் 
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஏ.எம்.ஆரிப் பேசியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் உரைக்கு என் கடுமையான ஒப்புதலின்மை யைப் பதிவு செய்ய விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த வருவதற்கு முன்பு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டதைப் பார்த்து உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். உண்மையில், இந்த அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வையை எண்ணி மிகவும் திருப்தி அடைகிறேன்.

குடியரசுத் தலைவர் அவமதிப்புக்கு எதிர்காலம் பழிவாங்கும்
ஆனால் அத்தகைய குடியரசுத் தலை வரை இந்த புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும்போது வேண்டுமென்றே ஆட்சி யாளர்கள் ஒதுக்கிவிட்டார்கள். நம் அர சமைப்புச் சட்டத்தின்படி அவர்தான் நாடாளு மன்றத்தின் பாதுகாவலராவார்.

பாஜக அரசாங்கம் இவ்வாறு குடியரசுத் தலை வருக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதற்கு எதிர் காலம் பழிவாங்கிடும் என்று கருதுகிறேன். நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு அவர் ஏன் அழைக்கப்படவில்லை என்று இப்போதாவது இதற்குப் பதிலளிக்கும்போது பிரதமர் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாத குடியரசுத் தலைவர், அது இந்த அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்று என்று பேசியிருப்பது குறித்து நான் பரிதாபப்படுகிறேன்.

அதேபோன்றே, இந்த திறப்பு விழாவிற்கு நாட்டிலுள்ள நடிகர்கள், நடிகைகள் எல்லாம் அழைக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் குடியரசுத் தலை வரை  அழைக்க வேண்டும் என்று சாதாரண மரியாதையைக்கூட இந்த அரசுதரவில்லை. குடியரசுத் தலைவர் ஒரு விதவை மற்றும் பழங்குடியினத்தைச்  சேர்ந்தவர்.

அதன்காரணமாகத்தான் அவர் அழைக்கப்படவில்லை என்று சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த லட்சணத்தில்தான் பெண்களின் சக்தியை அதிகரிப்பது தொடர்பாகவும், தலித்/பழங்குடியினர் மேம்படுத்தல் தொடர்பாகவும் ஏராளமாகப் பேசுகிறீர்கள்.

பிரிட்டிஷார் மதத்தால் செய்ததை, மொழியை திணித்துச் செய்கிறீர்கள்
இந்தியா, நம்முடைய அண்டை நாடு களான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தா னம் போல ஒரு மதம்சார்ந்த நாடாக மாறு மானால், (இதற்காகத்தான் சங் பரிவாரக் கும்பல் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது) நம் உயிர் நிரந்தரமாக நம்மைவிட்டுச் சென்றுவிடும். நம் அர சமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருக்கும் மதச்சார்பின்மையை அதி லிருந்து எடுத்திட முயற்சித்துக் கொண்டி ருக்கிறார்கள். நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கோடிக்கணக்கான மக்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள்.

குடியரசுத்தலைவர் உரையில் சாமானிய மக்களின் ஆசை அபிலாசைகளை நிறை வேற்றக்கூடிய விதத்தில் எதுவுமே இல்லை. வெறும் வாய்ச்சவடால்கள்தான் நிரம்பி இருக்கின்றன.  

குடியரசுத் தலைவர் தன் உரையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்,  “ஒரே பாரதம், ஒரே கலாச்சாரம்” (“Ek Bharat, Shrestha Bharat”) என்கிற மணம் வீசட்டும் என்று கூறியிருக்கிறார். இதன் பொருள் என்ன? இதன் பொருள் இதன் மூலம் மதச்  சிறுபான்மையினரை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்பதேயாகும். பாஜக-வின் ‘இந்தி’, ‘இந்து’, ‘இந்துஸ்தான்’ என்பதன் மாற்று முழக்கமே இதுவாகும். இது சாவர்க்கரின் சித்தாந்தமாகும்.

பிரிட்டிஷார் மதத்தின் பேரால் நாட்டை பிளவுபடுத்தினார்கள். இப்போது ஆட்சி செய்பவர்கள் இந்தி மொழியைத் திணித்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.

1 கோடி வேலை கூட  புதிதாக உருவாக்கவில்லை
குடியரசுத் தலைவர் தன் உரையில் சென்ற ஆண்டு லட்சக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலை கொடுத்ததாகக் கூறி யிருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டு களாக எத்தனை வேலைகள் அரசாங்கத் தால் உருவாக்கப்பட்டு, அளிக்கப்பட்டது என்று அவரால் ஏன் கூற முடியவில்லை.

2013இல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர  மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகள் உருவாக்கு வோம் என்று உறுதி அளித்தார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் ஒரு கோடி வேலைகள் கூட புதிதாக உருவாக்கப் படவில்லை.  

உறுப்பினர்களின்றி விவாதமின்றி 10 சட்டம் நிறைவேற்றம் அவமானமில்லையா?
சென்ற கூட்டத்தொடரில், மக்களவை யில் 100 உறுப்பினர்களும், மாநிலங்கள வையில் 49 உறுப்பினர்களும் இடை நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில்  பத்து சட்டமுன்வடிவு கள் எவ்விதமான விவாதமுமின்றி நிறை வேற்றப் பட்டிருக்கின்றன. இதனை இந்த அரசாங்கம் அவமானமாகக் கருதவில்லை.

குடியரசுத்  தலைவர், ராமர் கோவில் கட்டு மானம் சம்பந்தமாக மிகவும் பீற்றிக்கொண்டு உரை நிகழ்த்துகையில் நம்முடைய அர சமைப்புச்சட்டப்படி இந்தியா ஒரு மதச்சார் பற்ற நாடு என்பதையே மறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. ஒவ்வொன்றையும் அரசியலாக்க நீங்கள் முயற்சித்துக் கொண்டி ருக்கிறீர்கள்.

அன்னதாதா திட்டம் என்னாச்சு? 58 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
குடியரசுத் தலைவர் தன் உரையில் ஒன்றன்பின் ஒன்றாக ஏராளமான சாத னைகளைக் கூறியிருக்கிறார். ஆனால், இந்த அரசாங்கம் பல துறைகளில் படுதோல்வி அடைந்ததைப்பற்றி எதுவுமே கூறவில்லை. அவையும் மிகவும் முக்கிய மாகும். ‘அன்னதாதா’ என்னும் திட்டம் என்ன வானது?  விவசாயத்துறையில் அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக 58 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் கேட்டிருந்த ஒரு கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ஆசிய விளை யாட்டுகள், ஊனமுற்றோர்க்கான ஆசிய விளையாட்டுகள் குறித்து சில புள்ளிவிவ ரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒலிம்பிக்கில் ஏன் நம்மால் ஒரு தங்கப் பதக்கம் கூட பெறமுடியவில்லை?

நம் அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவு  செய்து சிலைகள் வைத்து  அரசியல்  ஆதா யம் அடைவதிலேயே குறியாக இருக்கிறது.

கேரளம் நிலம் ஒதுக்கியும் எய்ம்ஸ்க்கு அனுமதியில்லை
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கூறு வதுடன் என் உரையை முடித்துக்கொள்கி றேன். கடந்த பத்தாண்டுகளில் 7ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகள் 16ஆக அதிகரித்திருப்பதாக அரசால் கூறப் பட்டிருக்கிறது. ஆனாலும், கேரளாவிற்கு இது வரை ஒதுக்கப்படவில்லை. கேரள அரசா ங்கம் இதற்காக நிலம் ஒதுக்கியுள்ள போதிலும், இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்திற்கு எதிரான அரசியல் காழ்ப்பு ணர்ச்சி காரணமாக, ஒன்றிய அரசாங்கத் தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இவ்வாறு இந்த அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை மீறிக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது என்று ஏ.எம். ஆரிப் பேசினார்.  (ந.நி.)