india

img

சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டம் தொடர்கிறது

கொச்சி, மார்ச் 9-  பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்தாலும், இந்தியாவில் பெண்கள் சமத்துவத்துக்காக போராடி வரு கின்றனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே கூறினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டக்குழு நடத்திய மகிளா சங்கமத்தை மரியம் தவ்லே தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:  உலகெங்கிலும் பெண்களின் சமத்துவத் திற்காக இடதுசாரி அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. பெண்களுக்கு அதிகா ரம் அளிக்க எந்த முதலாளித்துவக் கட்சியும் நடவடிக்கை எடுப்பதில்லை. இடதுசாரிகள் ஆளும் கேரளத்தின் நிலைமை மற்ற மாநிலங்க ளில் இருந்து வேறுபட்டது. இங்கு பெண்க ளுக்கு சமத்துவமும் சுதந்திரமும் உள்ளது. இரத்த சோகை மற்றும் பட்டினியால் பெண் கள் இறக்கவில்லை. கேரளத்தில் விலைவாசி உயர்வால் ஏற்படும் எந்த அவலமும் இல்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஆட்சி செய்யும் நாட்டில் இன்று 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரு கின்றன.  இவ்வாறு அவர் கூறினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.அனிதா தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் ஜீனாகுமாரி, மாவட்டச் செயலர் புஷ்பாதாஸ், மாநிலக் குழு உறுப்பினர்கள் டெஸ்ஸி ஜேக்கப், பீனா பாபுராஜ், எர்ணா குளம் மக்களவைத் தொகுதி எல்.டி.எப் வேட்பா ளர் கே.ஜே.ஷைன் ஆகியோர் பேசினர்.