தில்லி மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்பாக செவ் வாயன்று ஆம் ஆத்மி கட்சி யின் பொருளாளரும், எம்பியான என்.டி குப்தா, அரவிந்த் கேஜ்ரிவா லின் செயலாளர் பிபவ் குமார் மற் றும் ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமலாக்கத்துறையின் மிரட்டல் சோதனைக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி பொதுப் பணித்துறை அமைச்சருமான அதீஷி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,”கடந்த 2 ஆண்டு களாக ஆம் ஆத்மி கட்சித் தலை வர்களிடம் நூற்றுக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டும், அமலாக்கத்துறை இதுவரை ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை. ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண் டும் என்று தொடர்ச்சியாக நீதிமன் றம் கூறிய நிலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அம லாக்கத்துறை ஒரு உறுதியான ஆதா ரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அரசுதரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை மாறியி ருந்தது. வீடியோ ஆதாரங்கள் வழங்ப்பட்டது, அதில் ஒலி நீக் கப்பட்டிருந்தது. இப்போதும் ஆத்மி வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலமாக பாஜக எங்கள் (ஆம் ஆத்மி) கட்சியை ஒடுக்க நினைக்கி றது. ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லி கொள்கிறேன். நாங்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்” என அவர் கூறினார்.