கண்ணீருடன் அலைக்கழியும் உறவினர்கள்
ஆக்ரா, செப்.14- ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமை களை வழங்கி வந்த 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மக்களின் போராட்டம் வெடித் தது. அப்போது 300-க்கும் மேற்பட்டோ ரைக் கைதுசெய்த மத்திய அரசு, உத்த ரப்பிரதேச மாநிலத்திலுள்ள சிறையில் அடைத்து வைத்துள்ளது. இந்நிலையில், 300 பேரும் எப்போது விடுதலை ஆவார்கள்? என்பது தெரி யாத நிலையில், அவர்களின் குடும்பத்தி னர் கண்ணீருடன் காஷ்மீருக்கும் ஆக்ரா வுக்குமாக அலைக்கழிந்து கொண்டிருக் கின்றனர். ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் சான்று இல்லாத யாரும், ஆக்ரா உள்ளிட்ட உத்தரப்பிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பவர்களைப் பார்க்க முடியாது என்பதால், பல ரும் ஏமாற்றத்துடனே அலைந்து திரும்பு கின்றனர். காஷ்மீரில் தொலைத் தொடர்பு வசதி கள் இன்னும் முழுமையாக சரியாக வில்லை என்பதால் அங்கிருந்து சான்றுக் கடிதங்களை பேக்ஸ் மூலம் பெறுவதில் சிக்கல் நீடிப்பதும் இதற்கு முக்கியக் கார ணமாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறை அனுமதி பெற்றே, ஆக்ரா வந்தா லும், பேக்ஸ் வேலை செய்யாததால், மீண்டும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பய ணித்து, காஷ்மீருக்குச் சென்றுதான் கடிதம் பெற்று வர வேண்டிய துய ரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். “எனது மகன் குலாம் கைது செய்யப் பட்டு இங்கு (ஆக்ராவில்) அடைக்கப்பட் டுள்ளார்; அவர் தீவிர அரசியலில் ஈடு பட்டு வந்தார். ஆனால் சட்டவிரோதமாக எந்தக் காரியத்திலும் ஈடுபட்டதில்லை; ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவரைப் போலீ சார் கைது செய்து கொண்டு சென்றனர்; அதன் பிறகு அவரை நாங்கள் பார்க்க முடியவில்லை. அவருக்கு 2 வயதில் மகள் உள்ளார். எனது மருமகளும், பேத்தி யும், குலாமைப் பார்க்க கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று ரியாஸ் என்ற காஷ்மீரி கண்ணீர் விடு கிறார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு காஷ்மீரிலிருந்து ஆக்ரா கொண்டு வரப்பட்டு மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுமார் 300 பேர் வரை உத்தரப்பிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருசிலர் மட்டுமே 50 வய தைக் கடந்தவர்கள். இவர்களில் பலர் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி யைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படு கிறது. மேலும், இவர்களில் கல்லூரி மாண வர்கள், பிஎச்டி ஆய்வு மாணவர்களும் உள்ளனர். மத போதனையாளர்கள், ஆசி ரியர்கள், வர்த்தகர்கள் மற்றும் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் ஒருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.