india

img

உமர் காலித் ஜாமீன் மனு 7-ஆவது முறையாக ஒத்திவைப்பு

புதுதில்லி, ஜன. 25 - தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன் னாள் மாணவர் தலைவர் உமர் காலித் ஆவார். 2020- ஆம் ஆண்டு சிஏஏ சட்டத் திற்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டதற்காக, இவர் மீது கலவரத் தைத் தூண்டிய குற்றச்சாட்டை சுமத்திய ஒன்றிய பாஜக அரசு, காலித்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைதுசெய்து சுமார் மூன்று ஆண்டு களாக சிறையில் வைத்துள்ளது.

அவருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.  இந்நிலையில், உமர் காலித்தின் ஜாமீன் மனுவை, புதன்கிழமையன்று உச்ச நீதி மன்றம் தொடர்ந்து ஏழாவது முறையாக ஒத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கு ஜனவரி 31 அன்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

இதேவழக்கில், நடாஷா நர்வால், தேவாங்கனா கலிதா மற்றும் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ள நிலையில், தனக்கும் ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்பது உமர்  காலித்தின் கோரிக்கையாகும். அதுமட்டு மல்லாமல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (UAPA) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடி தன்மை குறித்து கேள்வியெழுப்பி தனியாக ஒரு மனுவையும் உமர் காலித் தாக்கல் செய்துள்ளார்.