போ, கல்வி கல்!
சொந்தக்காலில் நில், சோராமல் உழை.
ஞானத்தை, செல்வத்தைச் சேர்.
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்.
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்.
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே.
போ, போய் கல்வி பெறுக!
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக!
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது,
கற்று, சாதியின் சங்கிலிகளை அறுத்திடுக!
- சாவித்திரி பாய் புலே -