சமீபத்தில் நிறைவுபெற்ற மத்தியப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்க ளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப் பற்றிய நிலை யில், தெற்கு உஜ்ஜயினி தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் யாதவ் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் உயரமான ராணுவ தளமான சியாச்சினில் (லடாக்) பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ மருத்துவ அதிகாரியான கேப்டன் பாத்திமா வாசிம் திங்களன்று தனது பணியை தொடங்கினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளதாக தெலுங்கானா முன் னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகளும், பிஆர்எஸ் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா கூறியதற்கு, சொந்த கட்சிக்குள் (பிஆர்எஸ்) எதிர்ப்பு கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவ காசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி அரசு பள்ளிகளில் இடைநிற்றல் குறைந் துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 6 ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.